அட்சரம்
எஸ். ராமகிருஷ்ணனின் எழுத்துலகம்
யூனிகோடில் தேட
தொடரும் உரையாடல்
கதையின் பாதை
வாழ்வது என்பதே ஒரு மாயம் தான்.
உலகசினிமா
நனையாத எனது மழைநாட்கள்.
காணிக்காரர்கள்
எழுதுவது ஏன்
உலகமயம்
கட்டபொம்மன் காடு
எனக்கு பிடித்த மொழிபெயர்ப்பு கதைகள் - 1
நதிமூலம்
கடக்க முடியாத பாதை
நீராலானது
துணையெழுத்து
தீராப்பசி
Links
தமிழோவியம்
தமிழ்ஈபுக்
மனத்துக்கண்
நேசமுடன்
தொடர்புகொள்ள
எஸ். ராமகிருஷ்ணன்
நாள் :
9/22/2004 1:59:11 PM,
எஸ் ராமகிருஷ்ணன்
கட்டபொம்மன் காடு
சுதந்திரப்போராட்டம் பற்றிய நினைவுகள் வெறும் காகிதக்குறிப்புகளாக மட்டும் எஞ்சியிருக்கும் சமகாலத்தில் ஒரு கிராமம் சரித்திரத்தின் நிழலிலே வாழ்ந்து கொண்டிருக்கிறது. பாஞ்சாலங்குறிச்சி பிடிபட்ட பிறகு அங்கிருந்து தப்பிய கட்டபொம்மன் தலைமறைவாக வாழ்வதற்கு புதுக்கோட்டைப் பகுதிக்கு வந்து சேர்ந்தான். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு பக்கத்தில் உள்ள குமாரபட்டி என்ற ஊரின் புறவெளியில் உள்ள அடர்ந்த காட்டில் கட்டபொம்மன் ஒளிந்திருந்தாகவும், அவனை தந்திரமாக காவலர்கள் பிடித்ததாகவும் சரித்திரக்குறிப்புகள் கூறுகின்றன. நு¡ற்றாண்டுகளைக் கடந்து இன்றும் அந்தக் கிராமத்தில் கட்டபொம்மன் ஒளிந்திருந்த காடு அப்படியே பாதுகாக்கபட்டு வருகின்றது. அதை உமைங்குறை என்று மக்கள் அழைக்கிறார்கள்.
அந்த கிராமத்து மக்கள் தங்கள் ஊரில் வந்து ஒளிந்திருந்த கட்டபொம்மனைப் புதுக்கோட்டை அரசரின் ஆணையின்படி பிடித்துக் கொடுத்துவிட்டார்களே என்ற குற்றவுணர்ச்சியில் கட்டபொம்மன் ஒளிந்த காட்டை எந்த சிதைவுமின்றி தெய்வம் போல வழிபடுகிறார்கள். அக்காட்டிலிருந்து சிறு சுள்ளிஒடிப்பது கூட கிடையாது. மரங்கள் தானாக விழுந்து மக்கிக் கிடக்கின்றன. கட்டபொம்மனோடு சேர்ந்து ஒளிந்திருப்பதாகச் சொல்லப்படும் ஊமைத்துரையை அவர்கள் தெய்வமாக வழிபடுகிறார்கள்.
கட்டபொம்மன் ஒளிந்திருந்த காலத்தில் விருந்திற்கு அழைத்து அவன் இலையில் சாப்பாட்டை கையில் எடுத்த போது முதுகின் பின்னிருந்து மடக்கிப் பிடித்துவிட்டார்கள் என்று கர்ணபரம்பரைக் கதையொன்றும் அக்கிராமத்திலிருக்கிறது. காட்டில் து¡ர்ந்து போயிருக்கக் கூடிய சிறிய கண்மாய் ஒன்றும் காணப்படுகிறது. பெரிய வட்டப்பாறையும் அதன் அருகில் வேங்கை மரங்களுமிருக்கின்றன. மயில்கள் நிறைய தென்படுகின்றன, ஆள்உயர கள்ளி மரங்களும் காட்டுப்புளியமரங்களும் கொண்ட அந்தக் காடு இப்போதும் வெயில் நுழைய முடியாதபடி தானிருக்கிறது.
அந்த காட்டுபகுதி அக்காலத்தில் சிவகங்கை ஜமீனுக்கும் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கும் எல்லையில் அமைந்திருக்கிறது. யாராவது பிடிக்கவந்தால் ஒரு பக்கமிருந்து இன்னொரு பகுதிக்கு போய்விடலாம் . அதனால் தான் அங்கே கட்டபொம்மன் ஒளிந்திருந்தாக சொல்கிறார்கள்.
காலம் எத்தனையோ விஷயங்களைக் கடந்து சென்றுவிட்டிருக்கிறது. ஆனாலும் கிராமத்து மனிதர்களின் நினைவில் இன்னமும் கட்டபொம்மனும் ஊமைத்துரையும் வாழ்கிறார்கள் என்பதற்குச் அத்தாட்சியாகயிருக்கிறது இக்கிராமம்.
|
| மதிப்பு :
2.7
| மதிப்பீடு செய்ய :
1
2
3
4
5
|
மறுமொழி
meera
9/25/2004 , 2:08:46 AM
it is very nice
fghfg
10/7/2004 , 2:45:11 AM
hg
பாலாஜி
10/10/2004 , 9:13:26 AM
மருதுபாண்டியர்கள் இதே போல் அடர்ந்த காட்டில் மரத்தினால் ஆன குகைக்குள் ஒளிந்திருந்தார்களாம். அந்த மரமும், குகையும் காட்டினுள் சென்று புகைபிடித்த பாக்கியினால், தீ அபகரித்துவிட்டதாக குமரி அனந்தன் பேச கேட்டிருக்கிறேன்.
தங்களுக்கு அவர்கள் வசித்த காடு, இந்த குறிப்பு குறித்த மேல்விவரங்கள் தெரிந்திருந்தால் பகிர்ந்து கொள்ள விண்ணப்பிக்கிறேன்.
Thamilan
5/16/2006 , 12:41:30 AM
Kaddapomman Kaaththa Thamil indru Sathiyal Aliya pokiru. Villiththu ellungal. Thamilai Kakka
kannan
7/30/2006 , 11:17:22 PM
Thamilan dont be dramtic.Your insomnic illusions are like the dead, decaying trees mentioned in this column, unnoticed unappreciated, simply nobody cares..try to get some sleep...
s.maheshkumar
3/29/2009 , 3:36:32 AM
It is very nice.In my friends birthday I will gift the s.ramakrishnans books only.
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2004
எஸ். ராமகிருஷ்ணன்
Powered by : Tamiloviam - Tamilpathivu
Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.