|
- வெங்கடேஷ்,
9/5/2007 8:57:57 AM |
| |
|
இது சமரசங்களின் காலம்!
|
|
இன்றைக்கு இருக்கும் டீன் ஏஜ்ஜர்கள் இன்னும் சாமர்த்தியசாலிகள். இன்னும் விவரமானவர்கள். இன்னும் பொறுப்பானவர்கள். உலகம் பத்து பனிரெண்டு வயதிலேயே அவர்கள் படிக்க வேண்டிய படிப்பு, பெற வேண்டிய முன்னேற்றம் என்று எல்லாவற்றையும் பதிவுசெய்து வைக்கக் தொடங்கிவிடுகிறது. அப்படிப்பட்டவர்கள், இப்படியா தத்தாரியாக அலைவார்கள்?
|
|
மேலும் படிக்க |
மறுமொழி இட [0] |
| |
|
-வெங்கடேஷ்,
2/2/2006 1:39:03 AM |
| |
|
தொலைநோக்கு விகடன்
|
|
கண்ணெதிரேயே ஒரு மீடியா சாம்ராஜ்யம் உருவாகிக்கொண்டிருக்கிறது. வருங்காலத்தில் விகடன் மேலும் வளர்ச்சி பெற, பங்குச்
சந்தைப் பக்கம் ஐபிஓ-உடன் வந்தார்களானால், நான் கண்ணை மூடிக்கொண்டு பங்குகளை வாங்கிப் போட்டுவிடுவேன்.
|
|
மேலும் படிக்க |
மறுமொழி இட [4] |
| |
|
-வெங்கடேஷ்,
2/1/2006 11:58:19 PM |
| |
|
உறுபசி
|
|
பெரும்பாலும் வாழ்வில் தோல்வி கண்டவர்களை மையமாக வைத்து எழுதப்படும் படைப்புகள் வெற்றி பெற்றிருக்கின்றன. வெற்றிக் கதைகள் எப்படி உற்சாகம் தருகின்றனவோ, அதேபோல் தோல்விக் கதைகள் இலக்கியமாகி இருக்கின்றன. இதுவும் தோல்விபெற்றவனின் வாழ்வையே பேசுகிறது.
|
|
மேலும் படிக்க |
மறுமொழி இட [4] |
| |
|
-வெங்கடேஷ்,
10/9/2005 8:26:40 PM |
| |
|
எழுத்தும், எழுத்தைச் சார்ந்தும்...
|
|
அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி அன்று, அயனாவரத்தில் உள்ள ஒரு பள்ளியில் என்னைப் பேச
அழைத்திருந்தார்கள். மா ·பாய் தலைவர் பாண்டியராஜனின் தாயார் சொர்ணம்மாள் பெயரில் ஒரு கல்வி
அறக்கட்டளை உள்ளது. அவர்களே ஒரு பள்ளியையும் நடத்துகிறார்கள். மேலும், இந்தக் கல்வி
அறக்கட்டளை நிறைய மாணவ மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் கொடுத்து வருகிறது. அப்படி
ஸ்காலர்ஷிப் பெறும் மாணவ மாணவியர்களின் எதிர்காலத்தை வடிவமைத்துத் தரும் முகமாக,
பிற்காலத்தில் அவர்கள் எத்தகைய வேலைகளையெல்லாம் எடுத்துக்கொள்ளலாம் என்று வழிகாட்டும்
விதமாக, அந்தந்தத் துறையைச் சேர்ந்தவர்களைப் பேச அழைக்கிறார்கள்.
|
|
மேலும் படிக்க |
மறுமொழி இட [2] |
| |
|
-வெங்கடேஷ்,
8/14/2005 10:44:16 AM |
| |
|
பதிப்புத் தொழிலுக்கு என்று தனியிதழ்
|
|
பல ஆண்டுகளாக நான் நினைத்துக்கொண்டிருந்த விஷயம், பதிப்புத் தொழிலுக்கு என்று ஒரு பத்திரிகை வேண்டும் என்பதுதான். அதுவும் தமிழ் பதிப்பகங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கும் இவ்வேளையில் பதிப்புப் பணி, அதன் நுணுக்கங்கள், தொழில்முறை தொடர்புகள், பிரச்சினைகள், செய்திகள், போன்றவை பற்றிய பரந்துபட்ட கண்ணோட்டத்தோடு பத்திரிகை இருந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன்.
|
|
மேலும் படிக்க |
மறுமொழி இட [3] |
| |
|
-வெங்கடேஷ்,
8/13/2005 9:41:48 PM |
| |
|
பிரிவுகள்
|
|
தமிழ்க் கவிதையில் வித்தியாசமான முயற்சிகள் சாதனைகள் எப்போதும் உண்டு. முற்றிலும் முரண்பட்ட ஒன்றைச் சொல்லி, அதன் மூலம் மூலப்பொருளை உணர்த்தும் வல்லமை தமிழ்க் கவிகளுக்கு உண்டு. இன்று நாம் பார்க்கப் போகும் கவிதை, கவிஞர் கலாப்ரியா எழுதிய பிரிவுகள் என்ற கவிதை.
|
|
மேலும் படிக்க |
மறுமொழி இட [1] |
| |