பறவையின் தடங்கள் -- நாகூர் ரூமி
All writings like poems, stories and articles in Tamil and English

முகப்பு

யூனிகோடில் தேட
 
முற்றாத புள்ளி, சொற்களின் சீனப்பெருஞ்சுவர்
அலைகள்
என்று தணியும்?
காவியப் பயணம்
நல்லிணக்க நாகூர்
ஆல்ஃபா தியானம்
இலியட்
உடல் மண்ணுக்கு
விநோத உலகம்
முகமூடி கிழித்துக்கொண்ட வெங்கட் சாமிநாதன்
மெய் காட்டும் பொய்கள்
பெரியார் பன்னிரண்டு
இறைவா கவிதைகள்
ஞானத்தை நோக்கிய பயணம்
HIV - கொல்லப் பிறந்த கொடுங்கோலன்

Links
தமிழோவியம்
தமிழ்ஈபுக்
பா.ராகவன்
அப்துல் கையூம்
கீற்று
மதுரைத் திட்டம்
நாகூர் படைப்பாளிகள்
நாகூர் ரூமி (ஆபிதீன் பக்கங்கள்)
யுகபாரதி
தாஜ்
¬À¢¾£ý
எண்ணங்கள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
தொடர்புகொள்ள
நாகூர் ரூமி
  நாள் : 7/22/2004 4:10:02 PM, நாகூர் ரூமி
 
  தானம் -- நிதானம்

நான் பணிபுரியும் கல்லூரிக்கு வந்த கடிதம் ஒன்று எனக்கு அனுப்பப்பட்டது. மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி என ஏதாவது இருக்கும் என்று பிரித்துப் பார்த்தேன். அந்த மாதிரி கடிதம் அல்ல. பாலம் என்ற ஒரு சேவை அமைப்பின் தலைவரிடமிருந்து வந்திருந்தது. பா.கல்யாண சுந்தரம் என்ற அவர், உடம்பு முடியாமல் மருத்துவ மனையில் இருப்பதாகவும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் உதவி கேட்டும் கடிதம்.

ஆனால் இது வழக்கமாக உதவி கோரி வரும் கடிதங்களைப் போன்றதல்ல. அதில் எனக்கு சில ஆச்சரியங்கள் காத்திருந்தன. அதிலிருந்து நான் தெரிந்து கொண்ட சில விஷயங்கள்.

0
பாலம் என்ற சேவை அமைப்பு 51 ஆண்டுகளாக திருச்சியில் இயங்கி வருகிறது.

0
அதனை உருவாக்கியவர் பா. கல்யாண சுந்தரம்.

0
கல்வி, மருத்துவம், ரத்த தானம், இலவச சட்டம், இலவச திருமணம், ஆதரவற்ற குழந்தைகள், முதியோர், ஊனமுற்றோருக்கு நல்வாழ்வு, வேலை வாய்ப்பு, இயற்கையின் சீற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி போன்ற பல சேவைகளை செய்து வருகிறது.

0
இதன் தலைவர் பா. கல்யாண சுந்தரம் அமெரிக்காவின் Man of the Millenium விருதும் (6.5 மில்லியன் / 30 கோடி ரூபாய்), கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் Most Notable Intellectual of the World என்ற பட்டமும், ஐ.நா.சபையின் Outstanding People of the 20th Century என்ற கௌரவத்தையும் பெற்றவர்.

0
அவர் 35 ஆண்டுகளாக ஆசிரியராக வேலை பார்த்த சம்பளத்தையும், ஓய்வூதியத்தையும் (சுமார் 31 லட்ச ரூபாய்) பொது நலனுக்கு வழங்கிவிட்டவர்.

0
அமெரிக்கா வழங்கிய 30 கோடியையும் சர்வதேச குழந்தைகள் பல்கலைக் கழக அமைப்பிற்கு வழங்கியவர்.

0
தன்னுடைய பங்குக்கு கிடைத்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்க¨ளையும் பொது நலனுக்கு வழங்கியவர்.

0
தன்னுடைய செலவிற்காக திருநெல்வேலியில் உள்ள ஓட்டல் ஆர்யாஸில் சர்வராக இரவில் வேலை பார்த்தவர்.

0
20 ஆண்டுகளுக்கு முன்பே கண்களையும், மற்ற உடல் உறுப்புகளையும் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக எழுதி வைத்தவர்.

0
பொது நலன் பாதிக்கப்படக் கூடாதென்பதற்காக திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பவர்.

0
 M.A.(Litt), M.A.(G.T.), M.A.(Hist), B.Lib.Sc., D.G.T., D.M.T.I.F. & C.W., C.S. ஆகிய பட்டங்களைப் பெற்றவர்.

0
ஜனாதிபதிகள் சங்கர் தயால் சர்மா, அப்துல் கலாம், பில் கிளிண்டன், பிரதமர்கள் நேரு, நெல்சன் மண்டேலா, மன் மோகன் சிங், முதலமைச்சர்கள் காமராஜர், கருணாநிதி, சரத் பவார், ஆளுனர்கள் ·பாத்திமா பீவி, ராஜேந்திரன், நீதிபதிகள் நடராஜன், மோகன், இஸ்மாயீல், கல்வியாளர்கள் வா.செ.குழந்தைசாமி, வசந்தி தேவி, க.பா.அறவாணன், இயக்குனர்கள் பாலசந்தர், பாரதிராஜா, நடிகர் ரஜினிகாந்த், எல்லா தமிழ் ஆங்கில பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் -- இப்படி பல தரப்பிலிருந்தும் பாராட்டைப் பெற்றவர்.

இந்த சீதக்காதி மனிதர் அஜீரணக் கோளாறு காரணமாக பசியின்மை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இன்னும் சில மாதங்கள் தங்கி சிகிச்சை பெறுவதற்கான பணத்துக்குத்தான் இந்த கடிதம்.

ஒரு பக்கம் வியப்பாகவும் இன்னொரு பக்கம் வருத்தமாகவும் இருக்கிறது. தனக்கென்று ஒரு பைசாகூட வைத்துக்கொள்ளாமல் லட்ச லட்சமாகவும் கோடிகோடியாகவும் பணத்தை சமூக சேவைக்காக வாரி இறைத்தது சரியா என்ற கேள்விக்கு நாம் பதில் காண வேண்டியுள்ளது.

அதோடு, அவர் அந்த கடிதத்தில் சொல்லியிருக்கும் இன்னொரு விஷயம் கொஞ்சம் உறுத்துவதாக உள்ளது.

"பல முக்கிய பிரமுகர்கள் என்னுடைய மருத்துவ செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளார்கள். ஆனால் 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்களுக்கு, குறிப்பாக மாணவ மாணவிகளுக்கு என்னால் ஆன சேவைகளை செய்து வருகிறேன். ஆகையால் ஆசிரியர்களும் மாணவ மணிகளுமே எனது மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொள்வது பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன். மாணவ மாணவிகள் ஆளுக்கு ஒரு ரூபாயும், ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தில் எத்தனை உறுப்பினர்களோ அத்தனை ஒரு ரூபாயும் கொடுத்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்" என்று அவர் சொல்கிறார்.

கோடிகோடியாகக் கொடுத்தவர் ஒரு ரூபாயைக்கூட எதிர்பார்க்கக் கூடாதா என்றால் கூடாது என்றுதான் நான் சொல்லுவேன். உடல் நலமில்லாமல் இருக்கும் ஒரு மனிதர் குணமடைய உதவக்கூடாதா என்பதல்ல கேள்வி இங்கே. கொடுக்கின்ற கைகள் வாங்குகின்ற கைகளாக மாறலாமா என்பதுதான் கேள்வி. கூடாது. கண்ணன் கண்ணனாகத்தான் இருக்க வேண்டும். ஒரே ஒரு ரூபாய் அளவுக்கு குசேலனாகிக் கொள்கிறேன் என்று சொல்வது அவமானகரமானது.

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்று ஏன் சொன்னார்கள் என்று இப்போதுதான் புரிகிறது. இந்த மாதிரியான இழிநிலை ஏற்படாமல் ஒரு மனிதன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டியது அவசியம். தானம் செய்வது சிறந்ததுதான். ஆனால் நிதானமில்லாத தானம் அவமானத்தில்தான் முடியும். இனிமேலாவது அவர் சிந்திக்க வேண்டும். அவருக்காக நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அவர் முகவரி

பா.கலியாண சுந்தரம்
தலைவர் : பாலம்
அறை எண் : 23
Dr. G.விஸ்வ நாதன் மருத்துவ மனை
சிங்காரத்தோப்பு
திருச்சிராப்பள்ளி -- 620008
தொலைபேசி : 0431-2703945

 


   | Refer to friend  | மதிப்பு : 3.2  | மதிப்பீடு செய்ய :  | Print this article
 
 
மறுமொழி
ஜாண்
7/22/2004 , 11:59:36 PM
திரு. கலியாண சுந்தரம் அவர்கள் நெல்லையை சேர்ந்தவர். கல்லூரி ஒன்றில் librariyan-ஆக வேலை பார்த்தவர். வாழ்நாளில் தான் சம்பாதித்த பணம் அனைத்தையும் பொது நலனிற்காக செலவிட்டவர்.சில வருடங்களுக்கு முன்பு, இவருடைய பொதுநலச்சேவை பற்றிக் கேள்விப்பட்ட திரு. ரஜினிகாந்த், தனது தந்தையாக இவரைத் தத்தெடுத்ததைக் குமுதம் பத்திரிகையில் படித்ததாக ஞாபகம்.

உங்கள் கட்டுரையில், "கோடிகோடியாகக் கொடுத்தவர் ஒரு ரூபாயைக்கூட எதிர்பார்க்கக் கூடாதா என்றால் கூடாது என்றுதான் நான் சொல்லுவேன்" என்று எழுதியிருக்கிறீர்கள். என்னைக் கேட்டால், அவர் எதிர் பார்க்கும்படி, நாம் வைத்திருக்கக் கூடாது என்பதே சரி. மேலும், தானம் செய்யும் முன், தனக்கென்று சிறிது வைத்துவிட்டுத் தானம் செய்திருக்கலாமே என்றாலும், எவ்வளவு தனக்கென்று வைப்பது, எதைத் தானம் செய்வது என்று கேள்வி வரும். திரு. காமராஜர், திரு. கல்யாணசுந்தரம் போன்ற தன்னலமற்றவர்களால் இப்படி நினைக்க முடியாது. எனவே, இவரைப் போன்ற மனிதம் நிறைந்த மனிதர்களுக்கு அரசாங்கமே எல்லா உதவிகளையும் செய்து, அவர்கள் வாழ்க்கைத் தேவைகளுக்கு ஒரு உத்தரவாதம் அளித்தால், இன்னும் இதுபோன்ற அனேகருக்கு அது ஊக்கமளிப்பதாக அமையுமென்பதே என் கருத்து.
   
Nagore Rumi
7/23/2004 , 3:55:00 AM
Thanks Mr John. I agree with what you say.
anbudan
rumi
   
கணேசன்
7/23/2004 , 9:46:22 AM
அன்புள்ள ரூமி,
செய்தியைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
நீங்கள் சொல்லியிருக்காவிடில் இந்த நல்ல உள்ளத்தைப் பற்றி நான் அறியாமலேயே இருந்திருப்பேன்.
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றும் புரிகிறது.
"பாத்திரம் அறிந்து பிச்சையிடு"
"ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்டு"

பா.கலியாண சுந்தரம் அவர் அளவிற்கு மிக நல்லவர்,உத்தமர்.குறையெல்லாம் நம்மீது தான்
(நாம் மற்றும் நாம் வாழும் சமுதாயம்).அவர் குழந்தைகளிடம் கையேந்துவதன் மூலம் குழந்தைகளுக்கு உயிருக்கு உதவும் பண்பை வளர்க்கிறார் என்றே நினைக்கின்றேன்.

குருவிக்கு குருணையிடுவது போல்,இந்தக் குழந்தைகள் கொடுக்கும் ஒரு ரூபாய் இந்த நல்ல உள்ளத்தைக் காக்கட்டும்.

அரசியல் பிரபலத்திடம் உதவி பெற்றால் அவர்கள் ஒரு போட்டோ எடுத்து அதனை அரசியல் அருவடைக்கும் பயன்படுத்திக் கொள்வார்கள். இஸ்திரிப்பெட்டி கொடுத்து இந்தியாவை ஆள நினைக்கும் சினிமாக் கதாநாயகர்கள், இதன் மூலம் தங்களை அரசியலில் நிலைப்படுதிக் கொள்ள நினைப்பார்கள்.

எரிகின்றவீட்டில் பிடுங்கியவரை இலாபம் என்பது போல்,கும்பகோணத்தில் அநாதையான பெற்றோர்களை பணம் கொடுப்பதன் மூலம் 'பிச்சைக்காரர்'களாக ஆக்கியவர்கள் தானே இவர்கள்.
பார்க்க வெங்கடேஷின்:
நிதியுதவி - யார் வாயை அடைக்க?
http://www.tamiloviam.com/nesamudan/page.asp?ID=61&fldrID=1

இப்படிப் பட்ட செய்திகளைக் கேட்கும் போதெல்லாம் ஏதாவது செய்யவேண்டும் என்று மனம் அரிக்கிறது. எனது கையாலாகாதனத்தால் ஏதும் செய்ய முடியாமல் பிணமாய் வாழ்கிறேன்.
அன்புடன்,
கணேசன் http://kgans.blogspot.com
   
Ashok
7/23/2004 , 11:19:45 AM
Nice to know about selfless person like him. You have done good job by spreading words about him.
   
Jagan
7/23/2004 , 10:43:28 PM
தனது வழ்க்கையை பொதுப்பணிக்காக அர்ப்பணித்த ஒருவருக்கு தாங்கள் உதவ ஒரு சந்ர்ப்பம் கிடைத்தமைக்காக மகிழ்வுற வேண்டும். அவரது எண்ணத்தை நாம் மதிக்க வேண்டும்.
இவரே நம் பள்ளிக்குழந்தைகளுக்கு ஒரு உதாரண மனிதர்.
   
Amburaan
7/27/2004 , 7:39:09 AM
Prophet Mohammed (PBUH) passed away thousand of years ago. He migrated from Mecca to Madina as an asylum seeker with a bunch of his companions. The refugees called as Muhajir and the Sponsor called as Ansar. The residents of Madinah loved them very much. . All the guest tide-up with brotherhood, Madiniates divided their property and handed over to refugees one of the guest name was Abdul Rehman ibn Awof. He was asked by his host, I have 2 wives, just look at them, and select one, later I will divorce it for you, so that you can get marry her. He thanked him, God bless you and your wives, and I don’t need it. What a great personalities. As such one more event. Once Prophet Mohammed given a call of charity and did a small query. Umar told him I divided my property into two. One part surrendered to the government and remaining kept for my family. As such he asked Abu Bkar. Abu-Baker told him I surrendered to treasury whatever I had. People asked him, what a crazy? Then what’s left for your family. Abu Bakr replied, The Almighty God and the messenger of God enough for me and my family.
Its fact that we couldn’t able to find these kinds of characters in this consumer world. But still we do get a chance to see like Pa. Kalyana Sundram. As such last year I read in the Kumudham about one freedom fighter. He made millions of rupees in Singapore and then all the money given to Subash Chandra Bose’s IRA. Now he is staying in slum area near Parry’s Chennai. The demised leader Vazaphadi Ramamurthy took little effort to help him. As such last night I got a chance to see an interview of Ms. Aruna Roy in DD. She was an I.A.S. officer, left her service 30 years ago to serve the poor. Reporter asked her, what’s your achievement? She simple says, I just wanted to kill my ego, All soul have equal merit, need equal dignity etc. etc, some of the gems like Pa. Kalyana Sundram, Aruna Roy are great one.
Some critical situation sharpens common men’s character. In this media world every one knows what’s happening in other part of the globe. As such at least some of us came to know there is an insurgency going on generally in Iraq and particularly in Fallujah. Since March 2003 tens of thousand causalities just in Baghdad alone. Lot of multinational aid agencies are engage in humanitarian service. Couple of weeks ago one the doctor lost his two brothers in cross firing. By that time he was in Operation Theater, some of his colleagues reminded him about it, He said – I love my brothers, May their soul rest in peace, but I don’t have time to attend the funeral prayer. I want to utilize it to save other life, simply no time for the guys who already left. Its time to help who are alive. As like Roomi many of us unable to realize this kind of maturity, boldness, kindness and sacrifice. Unfortunately this real problem lays all over the middle or upper middle class.
Pa. Kalyana Sundram never begged from any body, between life and death Pa. Kalyana Sundram wanted to involve all of the students, probably he is in his last battle. Worst orator is the best criticizer. I wish, if Roomy not belong to them.
   
இளங்குமரன்
5/11/2007 , 10:35:47 PM
சிங்கப்பூர் வானொலி நிலையத்தை இணையத்தில் தேடியபோது அமெரிக்க வானொலி மெரினாவைப் பார்க்க நேர்ந்தது. அதில் பாலம் கலியாணசுந்தரனாரை நேர்காணல் நடத்திய இணைப்பைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் செய்திகளைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற உந்துதலில் இணையத்தில் தேடியபோது தங்களது தானம் நிதானம் கட்டுரையைப் பார்க்க நேர்ந்தது. கண்களில் நீர்வரவழைக்கும் கட்டுரை. தங்களது கருத்து முற்றிலும் சரியானதே கர்ணன் குசேலனாகக் கூடாது. இவரைப்பற்றிய அண்மைய தகவல்கள் கிடைக்குமா?
   
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)

Powered by : Tamiloviam - Tamilpathivu
Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.