மகர ஜோதி பித்தலாட்டம்
February 1, 2011 by பிறை கொண்டான் · உங்கள் கருத்து
இந்த ஆண்டு மகர ஜோதி தரிசனத்திற்காக சென்றிருந்த இருந்த பக்தர்கள் அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் அகப்பட்டுக் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அகால மரணமடைந்து இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் பொங்கலன்று காணப்படும் மகர ஜோதியைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் அன்று காலை முதலே காத்துக் கிடப்பது வழக்கம். இந்த ஜோதி ஸ்வாமி ஐயப்பனுக்கு தேவர்கள் எடுக்கும் கற்பூர ஆரத்தியென்றும், ஒரு நம்பிக்கை உண்டு. இன்னும் சிலர் அன்று வானத்தில் தோன்றும் அதிசய ஜோதியென்றும் நம்பிக்கை வைத்துள்ளனர். [...]


