கிழித்தெறிந்த காகிதம்; காட்டினை அழித்தது!
May 31, 2010 by வித்யாசாகர் · உங்கள் கருத்து
எழுதி நிறைந்ததில் கவிதையானது – கதைகளானது – புத்தகமானது; கிழித்து கிழித்து எரிந்ததில் – குப்பையானது; காகிதம்! கண்ணீரில் மை தீட்டி, எண்ணம் வார்த்ததில் கடிதமானது; நினைவுகளை சுமந்து வந்ததில் பொக்கிசமானது; காகிதம்! கடவுளை பற்றி எழுதியதில் புனிதமானது காலம் கடந்ததை எழுதி வரலாறானது காலிடறி பட்டாலும் தொட்டுக் கும்பிடவைத்தது; காகிதம்! எரிந்ததில் சாம்பலானது எழுதிவைக்க குறிப்பேடானது நேரம் காலம் குறித்ததில் நாளேடானது நேற்றையும் இன்றையையும் எழுதி வைத்ததில் நாட்குறிப்பானது; காகிதம்! [...]


