தீட்சிதர் அகண்டம்
March 11, 2010 by லலிதா ராம் · 1 Comment
பாரதிய சங்கீத வைபவம் என்ற அமைப்பு கடந்த 4 வருடங்களாக தீட்சிதர் கிருதிகளுக்காக அகண்டம் நடத்தி வருகிறது. அகண்டத்தில், காலையில் தொடங்கி தொடர்ந்து 12 மணி நேரம் தீட்சிதரின் பாடல்கள் பாடப்படுகின்றன. "இது வரை நடந்த அகண்டங்களில் மட்டும், குறைந்த பட்சம் 280 தீட்சிதர்களாவது பாடப்பட்டு ஆவணப்படுத்தப்படூள்ளன. இன்னும் சில ஆண்டுகளில் , தீட்சிதர் கிருதிகள் முழுவதையும் ஆவணப்படடுத்தி விட முடியும்" என்கிறார் இந் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் குமார்.
வருடா வருடம் நடக்கும் இந்த அகண்டம், தீட்சிதர் [...]
கந்த கானாமுதம்
March 2, 2010 by லலிதா ராம் · Leave a Comment
சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில், கிருதிகளை முன்னிறுத்திய கச்சேரி பத்ததி உருவான போது, சங்கீத மும்மூர்த்திகள் என்று குறிக்கப்படும் தியாகராஜர், தீக்ஷிதர், ஷ்யாமா சாஸ்திரி, ஆகியோர் அமைத்த கிருதிகளே கச்சேரிகளில் புழங்கின. அதற்கு பல காலம் முன்னே, தமிழில், அருணாசல கவி, முத்துத் தாண்டவர், மாரி முத்தாப் பிள்ளை போன்றோர், பாடல்கள் புனைந்திருப்பினும், அவர்கள் அமைத்த மெட்டுகள் அதிகம் கிடைக்கவில்லை. இதனால் ஆங்கொன்றும், ஈங்கொன்றுமாய் கோபால கிருஷ்ண பாரதி போன்றோரின் பாடல்கள் கச்சேரிகளில் இடம் பெற்ற போதும், பெரும்பான்மையான [...]
கடவுள்களின் கார்னிவெல்
February 18, 2010 by ஸ்ரீதர் நாராயணன் · 4 Comments
பொதுவாக இந்தியர்கள் தாங்கள் அமெரிக்க மண்ணை மிதித்ததற்கு சாட்சியமாக டிஸ்னிலேண்ட், நயாகரா, நியுயார்க் டைம் ஸ்கொயர், லாஸ் வேகாஸ் காஸினோக்கள் என்று பிகாஸா ஆல்பம்களில் நிரப்பி வைத்தாலும் மனதிற்குள் ரகசியமாக ’இங்க எங்கிட்டுய்யா நைட் கிளப், நியூட் பார்லாம் இருக்கு? ஒருதடவ போயிட்டு வந்திரனும்’ என்று வந்த புதிதில் நேர்ந்து கொள்வார்கள். ஆரம்ப பரபரப்புகள் எல்லாம் அணைந்துபோய் டிவியும், கள்ள டிவிடியில் திரைப்படமுமாக வாழ்க்கை சுவாரசியமில்லாது போகும்போது சமூக சந்திப்பு கூடமாக முதலில் தெரிவது கோவில்கள். கிறிஸ்துவர்கள், [...]
பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்
February 18, 2010 by காயத்ரி வெங்கட் · 5 Comments
புகழ்ச்சி ஒரு மந்திரம், புகழ்ச்சிக்கு அடிமையாகாதவர் புவியில் யாருமில்லை. ஒருவரை ஆத்மார்த்தமாகப் பாராட்டும் போது அவரின் அகமும் குளிரும். முகமும் மலரும்.
காலையில் கணவர் வேலைக்குச் செல்லக் கிளம்பும் போது வழியனுப்ப ஆசையாக வந்து நிற்கும் மனைவியைப் பார்த்து,'என்னடீ ஈனு பல்லைக் காட்டிக்கிட்டு நிக்கிறே, வழி விடு' என்று எரிந்து விழும் கணவர் சாதாரண(சதா ரண)ரகம். இதே,"உன் முகத்தைப் பார்த்துட்டுப் போனா எல்லாக் காரியமும் சக்ஸஸ் தான், உன்னைப் பார்த்துக்கிட்டே இருந்தா எனக்கு வேலைக்கு நேரமாகும்" என்று கூறும் [...]
கோடீஸ்வர பொலார்ட்
February 5, 2010 by ச.ந. கண்ணன் · Leave a Comment
2008 ஐபிஎல் ஏல நிகழ்ச்சி நடந்தபோது 'கைரோன் பொலார்டை யாராவது 30 லட்சத்துக்கு வாங்கிக்கொள்கிறீர்களா..?' என்று கூவிக்கூவி விற்கப் பார்த்தது ஐபிஎல். ஆனால் ஒருவர்கூட பொலார்டை சீந்தவில்லை. 'ம்.. அடுத்த ஆள்' என்று நகர்ந்துபோனார்கள். ஆனால் 2010 ஐபிஎல் ஏலத்தில் பொலார்டுக்காக ஐபிஎல் அணிகளிடையே கடுமையான தள்ளுமுள்ளு நடந்தது. முடிவில் மும்பை அணி பொலார்டை நம்பமுடியாத விலைக்கு (12.6 கோடி என்று தகவல்) வாங்கியிருக்கிறது. (ஆனால் இதில் மூணே முக்கால்தான் பொலார்டுக்கு. மிச்சதெல்லாம் ஐபிஎல்லுக்கு). கிரிக்கெட் உலகில் [...]
சுவிஸ் பாசல் நகரில் லண்டன் பேராசிரியர்
January 24, 2010 by ஆல்பர்ட் · Leave a Comment
கணினி மூலம் தமிழ் பயிற்சி
சுவிஸ் நாட்டிலுள்ள பாசல் நகரில், பாசல் தமிக் கலவன் பாடசாலையின் அழைப்பின்பேரில், லண்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் சிவா பிள்ளை அவர்கள், 20.01.10 அன்று கணினி மூலம் தமிழ் பயிற்சியை ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நடாத்தினார்.
இன்றைய காலகட்டத்தில், கணனியின் பயன்பாடு நன்றாக அதிகரித்திருப்பதால், கணினி மூலமான கல்விமுறை, மாணவர்களை எளிதாகச் சென்றடைய ஒரு வழியாகும் என்பதே,பேரா.சிவா பிள்ளையின் மூலக் கருத்தாக இருந்தது. கணினி மூலம் கல்வி கற்பிக்கும் பல்வேறு முறைகளை இவர் திரையில் காண்பித்து, [...]
வயதான இளைஞன்
January 15, 2010 by ச.ந. கண்ணன் · Leave a Comment
சமீபத்தில் வெளியான இரண்டு ஹிந்தி படங்களில் (பா, 3 இடியட்ஸ்) அதன் கதாநாயகர்கள் தங்கள் வயதைக் காட்டிலும் குறைந்த வயது கொண்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்கள். ரஜினிகூட அப்படிப்பட்ட கதாபாத்திரங்களில்தானே நடிக்கிறார் என்று கேட்கலாம். சிவாஜியில் ரஜினியின் கதாபாத்திர வயது 28. ஆனால் அவர் அலட்டிக் கொள்ளாமல் விக் மட்டும் மாட்டிக்கொண்டு நடித்துவிட்டுப் போயிருப்பார். வயதான வேடங்களுக்கு நாடகநடிகர்போல வெள்ளைத் தாடியை ஒட்டவைத்தால் அடுத்த நிமிடம் அவர் தாத்தா ஆகிவிடுவார்.
ஆனால் பா, 3 இடியட்ஸ் ஆகிய [...]
உடல் எடையைக் குறைக்க டிப்ஸ்
January 1, 2010 by காயத்ரி வெங்கட் · Leave a Comment
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள்,
உணவுக்கட்டுப்பாடு
உடற்பயிற்சி
உடல் எடையைக் குறைக்க உண்ணும் பழக்கவழக்கங்களையும் உடற்பயிற்சியையும் கவனித்தாலே போதுமானது, உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் செய்ய வேண்டியன
1. உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க ஒரு லட்சியத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
2. தற்போதைய தங்கள் எடையை ஒரு டைரியில் குறித்து வையுங்கள்.
3. உங்கள் உணவுப்பட்டியலையும் அந்த டைரியில் குறித்துக் கொள்ளுங்கள்.
4. எடையைக் குறைக்க முயற்சிக்கத் தொடங்குங்கள்.
5. உங்கள் எடையை வாரம் ஒரு முறை சோதித்துக் கொள்ளுங்கள்.
6. உங்கள் [...]
பாயிரம் இல்லையேல் அது நூல் இல்லை!
October 29, 2009 by தமிழநம்பி · Leave a Comment
பாயிரம் என்பது முகவுரை. எந்த நூல் எழுதுவதாயினும் அந்த நூலுக்குப் பாயிரம் எழுத வேண்டுமென்பது மரபு. சிறந்த நூல்களுக்கு முகவுரை இன்றியமையாதது. அதனால் நூலை ஆராய்ந்து, அதன் முன்னதாக, அழகிய நுட்ப உரையாக, அணிந்துரையை, எந்த ஒரு நூற்கும் பெரிதும் இயைபுபட நந்தமிழ்ப் பெரியோர் வைத்தனர்.
"ஆயிரம் முகத்தான் அகன்றதாயினும் பாயிரம் இல்லது பனுவ லன்றே” என்கிறது நன்னூல். ஆயிரம் முகத்தைப் பெற்றது போன்று பல்வேறு துறைச் செய்திகளை விரிவாகக் கூறினாலும், பாயிரம் இல்லையேல் அது சிறந்த நூலாக [...]
