|
தந்தை கையைப் பிடித்துக் கொண்டு தடுக்கிவிடும் நெல் வரப்பு மீது தத்தித் தத்தி நான் நடந்த போது தாவித் தாவிக் குதித்த தவளை
பாசி படர்ந்த குட்டைக்குள்ளே பச்சை நிறத்தில் நீந்தும் தவளை பாவி மனுஷன் சூப்பு வைக்க பரிதாபமாய் பலியாகும் தவளை
தூண்டிலில் உணவாய் உயிர்விடும் தவளை பாம்பின் பசிக்கு புசியாகும் தவளை மனம் கல்லாய்ப் போன மனிதருக்கும் மருந்தாய் இருந்திட மரித்திடும் தவளை
அந்தி மழை பொழியும் போதும் அடை மழை வழியும் போதும் அல்லும் பகலும் பேதமின்றி அயராமல் கத்தி மகிழும் தவளை
அழிந்து வருதாம் அந்தத் தவளையினம் அக்கறை கொண்ட ஐநா சபை ஆண்டு 2008-ஐ தவளை ஆண்டாய் அறிவிப்புச் செய்திட்ட ஆறுதலோடு ஆரம்பமாகிற்று அடுத்ததோர் ஆண்டு
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
|