|
நாள்தோறும் காலையில் ஊடகங்களைத் திறந்தாலே பிழைப்புக்காக வங்கக் கடலில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவரைச் சிறை பிடிப்பதும் உயிர் பறிப்பதும் தவறாமல் வரும் செய்திகள்! வானம் பொய்க்கலாம் பூமி பொய்க்கலாம் விண்மீன்கள் பொய்க்கலாம் விண்கோள்கள் பொய்க்கலாம் இந்நிகழ்வுகள் மட்டும் பொய்ப்பதே இல்லை!
மத்தியில் ஆள முழுதாய் நாற்பதைத் தந்திட்ட தமிழகத்தின் அரசு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதும் இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதும் தொடர்ந்தாலும் அவர்களின் போக்கில் மாற்றம்.....?
இந்தியத் தமிழர்கள் மீது நிகழும் அச்சுறுத்தல்கள் தடுக்கப்பட வேண்டும்! இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும்! பிரச்சினைகள் யாவும் தீர்க்கப்பட வேண்டும்! குறைகள் குற்றங்கள் களையப்பட வேண்டும்! நிறைகள் இன்னும் மிகைப்படுத்தல் வேண்டும்! ஆளும் அரசுகள் உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே இனிவரும் தேர்தலிலும் இனியவை நாற்பது இனிதே நிலைக்கும்!
|