உங்கள் கருத்து  |
Ragu
7/4/2005 , 2:29:55 PM
[Comment
url]
|
முதலில், விடுதலைப் புலிகளிடம் இருக்கும் 1 அல்லது 2 சிறிய ரக விமானங்கள் இந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பது இந்திய இராணுவத்தையே அவமதிக்கும் செயல். அடுத்ததாக, ரோகான் குணரட்னா என்பவர் 9/11 இன் மழையில் சடுதியாக முளைத்த 'பாதுகாப்பு ஆய்வாளர்' காளான்களில் ஒருவர். இவருடைய பின்னணி மிகவும் கேள்விக்குரியது. புஷ்பராஜாவின் புத்தகத்தில் உள்ள பல விடயங்களில முன்னை நாள் போராளிகள் முரண்படுவது மட்டுமன்றி அவருடைய சுயபுகழ் பாடும் நிகழ்வுகள் கூட கேள்விக்குரியதே என்கிறார்கள். இலங்கையின் பாதுகாப்புச் செலவீனங்கள் கூடியதன் காரணம், புலிகளுக்கு அமெரிக்காவோ அன்றி மற்றைய வல்லரசுகள் ஆதரவளித்த்தோ அன்று, மாறாக இலங்கை ராணுவத்தின் தவறுகளும், போருக்கான தயாரின்மையும், தவறான திட்டமிடலும் தான். புலிகளிடம் இன்று இருக்கும் ஆயுதங்களில் 60% இற்கு மேற்பட்டவை இலங்கை ராணுவத்திடம் இருந்து பறித்தெடுக்கப்பட்டவையே! புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் புலிகளுக்கு பெரும் ஆதரவழிக்கிறார்கள் என்பது மறுக்கமுடியத உண்மை, ஏன்? அவர்களுக்கு இழைக்கப்பட்ட, தொடர்ந்து இழைக்கப்படும் அ நீதிகளும் அதை கண்டுகொள்ளாமல் இருக்கும் பிராந்திய, சர்வதேச நாடுகளின் போக்கினால் வேதனை அடைந்து இருப்பதுமே! புலம்பெயர்ந்த மக்கள் புலிகள் மிகவும் பலம் பெறுவதை ஆதரிக்கிறார்கள். பிராந்திய வல்லரசான இந்தியா இந்த விடயத்தில் நீதியாக நடந்திருக்குமானால் புலிகளை ஈழத்தமிழர்கள் கேள்விக்கப்பாற்பட்டவர்க்ளாக ஆதரித்திருக்க மாட்டார்கள். இந்தியா தனக்கு தென்புறமாக ஒரு நட்பு சக்தியை கொண்டிருக்க நினைப்பது தவறல்ல, ஆனால் சிங்களவர்கள் அதை செய்ய மாட்டார்கள் என்பது சரித்திர பூர்வமான உண்மை (இந்திய- சீன, இந்திய - பாகிஸ்தான் மற்றும் பல ராணுவ நிலைப்பாடுகள்). தமிழர்களே காலம் காலமாக இந்திய சர்பு நிலை எடுப்பவர்கள். அவ்வாறான இந்தியசார்பு நிலைப்பாட்டினால் சிங்கள மக்களின் சந்தேகத்துக்கு உட்பட்டு பாதிப்படைந்தவர்கள். அனால் இந்தியாவின் இன்றய நிலை தென்பகுதியில் ஒன்றுக்குப் பதிலாக இரண்டு எதிரிகளை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொன்டிருக்கிறது. இங்கு 2 வாரங்களுக்கு முன்னர் அமெரிக்க இராஜாங்க அமைச்சர் எகிப்தில் கூறியதை நினைவுகூர்வது பொருத்தமானது - 'எனது நாடு, அமெரிக்கா, பிராந்திய ஸ்திர நிலைமைக்காக ஜன நாயகத்தை விலைகொடுத்தது. இறுதியில் இரண்டும் இல்லாமல் போனதே விளைவு'. அதேபோலவே இந்தியாவும் இலங்கையின் ஒற்றை ஆட்சியை காப்பாற்ற தமிழர் நலன்களை விலை கொடுக்குக்குமாயின் இலங்கை ஒற்றை ஆட்சியற்றதும் வெவ்வேறு காரணங்களுக்காக இந்தியாவை வெறுக்கும் இரண்டினங்களை உடைய நாடாக மறும் அபாயம் மிகவும் அதிகமே தென்படுகிறது. |
| |
|
பாலாஜி
7/4/2005 , 9:58:05 PM
[Comment
url]
|
நன்றி ரகு.
>>முதலில், விடுதலைப் புலிகளிடம் இருக்கும் 1 அல்லது 2 சிறிய ரக விமானங்கள் இந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பது இந்திய இராணுவத்தையே அவமதிக்கும் செயல்.//
டேவிட் vs கோலியாத் போல் இந்த விஷயத்தை நினைத்தேன். 'தற்கொலை மிஷன்' ஒன்று கல்பாக்கத்தின் மேல் ஏவினால் என்ன ஆகும் என்று இந்திய ராணுவம் strategize செய்வதாக ஹிந்து நாளிதழிலும் செய்திகள் வந்திருந்தது. தி ஹிந்துவை நம்பமுடியுமா என்பதும் விவாதத்துக்குரியது.
மற்ற விவரங்களுக்கும் என்னுடைய நன்றி. |
| |
|
elleraajaa
7/5/2005 , 12:09:43 PM
[Comment
url]
|
முதலில், விடுதலைப் புலிகளிடம் இருக்கும் 1 அல்லது 2 சிறிய ரக விமானங்கள் இந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பது இந்திய இராணுவத்தையே அவமதிக்கும் செயல்.//
பாலாஜி மற்றும் ரகு அவர்களுக்கு,
1, 2 சிறிய ரக விமானம் இந்தியாவிற்கு நிச்சயம் அச்சுருத்தல் தான். என்னதான் நம் விமான படை மிகவும் சக்தி படைத்ததாக இருந்தலும், விடுதலை புலிகள் ஒன்னும் ஒருனாடின் படையில்லை,அவ்ர்கள் தீவிரவாதிகள், தங்களிடம் உள்ள விமானத்ட்தை வைத்து நாட்டிற்க்கு ராணுவசெலவு அதிகமா வைக்க முடியும்.
எப்படிப்பட்ட வலிமைமிக்க உடம்பாக யிருந்தாலும், ஒரு சிறுமுள் குத்தினால் வலி வலிதான். வலிய பொருத்துகுண்டு வலியில்லத மாதிரி நடிக்கலாம்.
நேற்று ஒன்னும் மில்லை, இன்று 1,2 சிறிய விமானம், நாளை எத்தனையோ. எந்த ஒரு செயலும் முதலில் ஒன்றிலிருந்துதான் ஆரம்ப்க்கும்.
இந்திய உடனே அவர்களுது விமான படையை அழிப்பதுதான் சிறந்த வழி.
விடுதலை புலிகளை நம்மமுடியாது... எதையவது பண்ணிவிட்டு பின் ஒரு துன்பியல் சம்பவம் என சொல்லுவார்கள்.
|
| |
|
Muthu
7/5/2005 , 3:29:48 PM
[Comment
url]
|
///பிருத்வி மட்டுமே தற்போது இரணமடுவின் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள உதவும். திருச்சியில் இருந்து இருபது நிமிட தூரத்தில் இரணமடு அமைந்திருக்கிறது. இதனால் 'சூர்யா' ஏவுகணைகளையும் இராணுவம் பயன்படுத்த ஆரம்பிப்பது பாதுகாப்பிற்கு வலு சேர்க்கலாம். .///
பாலாஜி, நல்ல கட்டுரை. என்னுடைய சந்தேகம் இங்கே ஒன்று உண்டு. எட்டாயிரத்தில் இருந்து பன்னிரண்டாயிரம் கிலோமீட்டர்கள் பாயக்கூடிய கண்டம் விட்டுக் கண்டம் தாவும் "சூர்யா" ஏவுகணைகள் இந்த இடத்தில் என்ன அவசியம் என்பதுதான் அந்தச் சந்தேகம்.
-முத்து
|
| |
|
ஈழநாதன்
7/6/2005 , 7:33:26 AM
[Comment
url]
|
பாபா இந்தக் கட்டுரை வருத்தத்தைத் தருகிறது.புஷ்பராஜா முதலாம் கட்ட ஈழப்போர் காலகட்டத்தைச் சேர்ந்தவர் அவரது மேற்கோள்கள் இந்த இடத்தில் எவ்வளவு பொருத்தமானவை என்பது புரியவில்லை.
அத்தோடு இந்தியவுக்கு விடுதலைப்புலிகள் மட்டுமே அச்சுறுத்தல் இல்லையென்பது அயோத்தியா தாக்குதல்களை பார்த்தால் புரிந்துகொண்டிருப்பீர்கள்.
இதற்கு மேலதிகமாக எதனையும் எழுதமுடியாத மனநிலை |
| |
|
மேதாவி
7/6/2005 , 12:18:08 PM
[Comment
url]
|
இன்னாபா சொல்ரே. மல்லையா எல்லா கிங் பிஷர் அப்டீனு ப்லேனு உட்ராரு. அந்த மாதிரி எதானு உடுவானுங்க... எல்லா பிசினஸ் ப்லான்பா... துட்டுபா துட்டு
|
| |
|
Kasual
7/7/2005 , 5:21:17 AM
[Comment
url]
|
பாலாஜி, நீங்கள் அல்கொய்தாவுடன் வி.பு களை ஒப்பிடுவது அபத்தம். அல்கொய்தாவின் முதன்மையான குறிக்கோளே அமெரிக்காவுக்குப் பங்கம் விளைவிப்பது. ஆனால் வி.பு களின் குறிக்கோள் தமிழீழம் பெறுவதொன்றே. அவர்களின் குறிக்கோளானா தமிழீ விடுதலைக்கு தடைகளை களைவார்களே ஒழிய இந்தியாவுடனோ, வேறு எந்த நாட்டுடனோ சண்டையிடுவதற்கு அவர்களுக்கு நேரமுமில்லை, பொருளுமில்லை. புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் அனுப்பிய காசில் வாங்கும் ஒன்று இரண்டு விமானங்களை, அவர்கள் தமிழீழ விடுதலைக்காக பயன் படுத்துவார்களே ஒழிய அதவிட்டு விட்டு இந்தியாவுக்குப் பூச்சாண்டி காட்டி 10 கோடி பெறுமதியுள்ள விமானத்தை வீண்ணடிக்க மாட்டார்கள். ப்ரி-எம்ப்டிவ் ஸ்ட்ரைக் கோரும் உங்களுக்கும் அமெரிக்க அராஜக வெளியுறவுக் கொள்கைக்கும் என்ன வேறுபாடோ? |
| |
|
elleraajaa
7/7/2005 , 4:16:15 PM
[Comment
url]
|
கசுல்,
அப்ப ராஜிவ் காந்தியை கொன்னது, தமிழ் நாட்டில பிரிவினை வாதத்தை துண்டுவது இது எல்லா, தமிழீழ தடைகலா என்ன?. இந்தயாவுடன் சண்டை போட முடியாது ஆனா, குழ்ப்பம் உண்டு பண்ணலாம்.
இப்படியே , காஷ்மீர் தீவிரவாதிகளும் விமானபடை வைத்தா அதுவும் இந்தியாவின் பாதுகாப்பிர்க்கு ஒன்னு ஆகாதுன்னு சொல்லிவிங்க போலயிருக்கு.
|
| |
|
இளையவன்
7/8/2005 , 7:58:49 AM
[Comment
url]
|
elleraajaa என்னப்பு ராஜிவைக் கொன்றது கொன்றது என்று திரும்பத் திரும்பப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். ராஜிவின்ர படைகள் ஈழத்தில எத்தனை கொடுமைகளைச் செய்தார்கள். எத்தனை தமிழ்மக்களின் உயிர்களைக் குடித்தார்கள்(3000த்திற்கு மேற்பட்ட தமிழ்மக்கள் இந்தியப் படைகளால் கொல்லப்பட்டார்கள் மற்றும் பல தமிழ்மக்கள் வன்கொடுமைக்குட்படுத்தப்பட்டார்கள்) . அதற்கெல்லாம் நாட்டின் தலைவர் என்ற முறையில் அவர்தான் பொறுப்பேற்க வேண்டும். அந்த 3000தமிழர்கள் கொல்லப்பட்டதெல்லாம் உங்களுக்கு நியாயமாகப் படுகிறதா? |
| |
|
Srikanth
7/8/2005 , 8:19:27 PM
[Comment
url]
|
இளையவரே,
ஆமாமய்யா, ராஜீவ் 'இத்தனை பேரை கொன்று, இவ்வளவு பேரைக் கற்பழித்து விட்டு வரவேண்டும்' என்று படைகளை அனுப்பி வைத்தார், அதனால் உம்மவர்கள் கொன்றார்கள். போங்க சார், வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கிட்டு...விமானத்தை அனுப்பி சோற்று மூட்டை போட்டானே, அந்த நன்றி கூட இல்லையே உங்களுக்கு...
நீரெல்லாம் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும் வரை, பெரும்பாலான இந்தியத் தமிழர்களின் இலங்கைத் தமிழர்கள் குறித்த அக்கறை, விடுதலைப் புலிகள் எதிர்ப்பு என்ற திரையின் பின்னால் தான் இருக்கும். வீம்பை விடுத்து நீங்கள் இதை உணரும் நாள், நம்மிருவருக்கும் நன்னாள்.
|
| |
|
இளையவன்
7/8/2005 , 10:03:11 PM
[Comment
url]
|
சோறு போட்டவன் உயிர் எடுக்கலாம் என்பது ஏதாவது மனு நீதியா அன்பரே. இந்திய இராணுவம் ஈழத்தில் நடத்துகின்ற அட்டூழயங்களை நிறுத்தக் கட்டளையிடும்படி எத்தனையோ முறை ராஜிவை ஈழத்தமிழர்கள் கோரிக்கை வடுத்து இருந்தார்கள். அந்தக் கோரிக்கைகளுக்கெல்லாம் அவருடைய பதில் மௌனமாகவே இருந்தது. நாட்டின் பிரதமர் என்ற முறையில் அவர் கட்டளையிட்டிருந்தால் நிச்சயமாக இராணுவத்தினர் செவிசாய்த்திருப்பார்கள். அதற்காக ராஜிவ் கொல்லப்பட்டதெல்லாம் சரியென்று நான் வாதிடவரவில்லை. என்ன ஒரு வித்தியாசம் நாங்கள் மூவாயிரம் அப்பாவிகளை இழந்து தவிக்கிறோம் நீங்கள் ஒரு அப்பாவியை இழந்து தவிக்கிறீர்கள். இதில் யாருக்கு யார் அனுதாபம் சொல்ல. |
| |
|
நல்லவன்
7/8/2005 , 11:29:43 PM
[Comment
url]
|
இளையவன், ஈழராஜா, ஈழநாதன்,...
விடுதலைப்புலிகள் வேறு எதனையும் எதிர்பார்க்கவில்லை. ஈழத்தமிழர்களுக்காக ஒரு நல்ல தீர்வு. அது தனித்தமிழ் ஈழமாக இருந்தாலும் சரி.. அல்லது ஈழமக்கள் சுதந்திரமான சமத்துவமான காற்றைச் சுவாசித்தலாக இருந்தாலும் சரி. அவர்கள் மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதே இல்லை. தம் மண்ணுக்காக அவர்கள் வீரப் போராட்டம் செய்து கொண்டிருந்தபோது ராணுவம் அனுப்பி அங்கே குழந்தைகளையும் கிழவிகளையும்கூட பாலியல் பலாத்காரம் செய்ததோடு மட்டுமல்லாமல் நட்புபோல நடித்து புலிகளுக்கு பாதகம் செய்தனர். அதனை கருத்தில் கொண்டே ராஜீவ் கொல்லப்பட்டார். தெரிந்தோ தெரியாமலோ ஆனது ஆயிற்று. அதனை அல்கொய்தாவுடனும் காஷ்மீர் தீவிரவவதிகளுடனும் ஒப்பிடுவது தவறு.
பாஸ்டன் பாலாஜி அவர்களுக்கு அமெரிக்கா பிடிக்கும், இஸ்ரேல் பிடிக்கும், லண்டன் பிடிக்கும், இந்திய் பிடிக்கும். வேறு எதுவும் பிடிக்காது. ஸ்ரீகாந்த் மீனாட்சி அவரின் நண்பர். நான் இங்கு வேறு எதுவும் சொன்னால் சவட்டிக் களையப் படலாம். |
| |
|
Namakkal Ravi
7/9/2005 , 2:07:47 AM
[Comment
url]
|
First responsibility of any tamil is to support/help srilankan tamils getting their freedom,self respect back from singala chavanists
Indeed, Any true dravidian will agree only LTTE is in a strong postion at this moment to acheive that
from my experience i have seen people with aryan roots see srilankan struggle as a different way and always try to air different ideas and confuse the audiance
A north indian saying LTTE is a terrorist organisation or srilankan tamil community should not get a strong military cannot be taken wrong, however its shocking, if same comes from a tamil and publised in a leading website like here.
I like to see a strong, prosporous India & tamil eelam together
Iam Tamil first and a Indian next
|
| |
|
Namakkal Ravi
7/9/2005 , 2:33:24 AM
[Comment
url]
|
though iam an indian, I dont support Indian claims that they are innocent in eelam. We paid Rajiv for what indian army have done in tamil eelam.
PAKISTAN separation in 1947 still creating itches with northindian/aryan people/politicians minds and with India/Pakistan relations. fight with pakistan is a north indian created problem, Did any tamils ever not supported our fellow country men ? we are in the forefront than anyone.. Have tamils got anything back from north indian people/politicians supporting srilankan tamils ? a big halwa. The hindi majority doenst want to see a strong tamil community with a strong military
World History going to say tamils are another big idiots in south asia, if we indian tamils whole heartadly dont support srilankan tamils
Balaji, I suggest you not to see eelam tamil issue with a help of Aryan prism. Iam afraid you always go wrong.
Note:- I certainly understand my post may sounds racist by speaking aryan/dravdian & north/south, pakistan issues, But i want re-confirm iam not a tamil chavanist & Ihave not tried to deviate the topic. I tried to make my point
|
| |
|
Srikanth
7/9/2005 , 11:25:21 AM
[Comment
url]
|
இளையவரே, தன்மையான பதிலுக்கும், ராஜீவைக் கொன்றது சரிதான் என்று வாதிடாததற்கும் நன்றி. நாங்கள் இழந்தது பன்னிரெண்டு அப்பாவிகளையும், ஒரு அப்பாவித் தலைவனையும். ஈழத்தில் ராணுவ அத்துமீறல்களால் கொல்லப்பட்டது சாதாரண மக்களாக இல்லாதிருந்தால், உங்கள் தலைவனாய் இருந்திருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.
நல்லவரே, எதிர்ப்புக் கருத்து சொல்பவர்களெல்லாம் ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் என்று நினைப்பது வசதியாக இருக்கலாம், ஆனால் தவறு. எனக்கு பாஸ்டன் பாலாஜியையும் தெரியாது; பல்லாவரம் பாலாஜியையும் தெரியாது. |
| |
|
இளையவன்
7/9/2005 , 8:05:03 PM
[Comment
url]
|
சிறிகாந் அவர்களே நாங்களும் எங்களுடைய பல தலைவர்களை இழந்துதான் இருக்கிறோம். காந்தி காட்டிய வழியில் இந்தியாவிடம் பன்னிரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து மடிந்த திலீபன் எங்கள் தலைவர்களில் ஒருவர்தான். மற்றும் குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிருவரை இந்தியப்படைகள் கைது செய்து சிறிலங்காப் படைகளிடம் ஒப்படைக்கும்போது சைனட் உட்கொண்டு மரணம் அடைந்த குமரப்பா மற்றும் புலேந்திரன் ஆகியோரும் எங்கள் தலைவர்கள்தான். அதனால் எங்களுக்கும் அதன் வலி தெரியும் அன்பரே.
|
| |
|
jey
7/11/2005 , 10:30:29 PM
[Comment
url]
|
அது என்ன ஆ ஊ எண்டால் அழிப்போம் ஒழிப்போம். இது தான் காந்திய வழி வந்த இந்தியாவின் குணமா? புலிகளால் ஆபத்து வருமா இல்லையா என்று பேசிப் பார்த்தால் என்ன? அதை விடுங்கள், ஏன் இந்தியா மட்டும் அஞ்ச வேண்டும்? மற்ற நாடுகள் ஏன் ஒன்றும் சொல்லவில்லை? இந்திரா காந்தி அம்மையார் சுடப் பட்ட போது எங்கள் சொந்தத் தாயை இழந்து விட்டது போல் துக்கம் அனுட்டித்தது ஈழத் தமிழரே. வெடி கொளுத்தி சந்தோசம் கொண்டாடியது சிங்களவரே. இன்னும் பல விடயங்கள் உண்டு தேவையென்றால் சொல்லுங்கள் எழுதுகிறேன். அதனால் புலிகளுடன் நட்பாகவும், சிங்களவருடன் கவனமாகவும் இருக்க வேண்டியது இந்தியாவின் பலத்தைக் கூட்டத் தான் உதவும். ஒரேயொரு சிறு கேள்வி: உங்கள் இந்ததியத் தூதரகத்தில் தமிழில் உரையாடி ஒரு வேலை சாதிக்க முடியுமா உங்களால்? முயன்று பாருங்கள். அப்போ புரியும் தமிழனுக்கு என்ன தேவை என்று. பாரதி சும்மா சொல்லவில்லை: "சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி, செய்வதறியாரடி"
|
| |
|
காவலன்
7/12/2005 , 7:51:36 PM
[Comment
url]
|
ஆக்கபூர்வமான கருத்துக்கள், எமது இந்திய சகோதரரின் ஆதரவு என்றும் எமக்கு தேவை. ஆனால் அதை ஒரு பலவீனமாக எண்ணுவீர்களாக இருந்தால், அது உங்களின் அறியாமையே அன்றி வேறெதுவுமில்லை பராபரமே.
இந்தியாவின் ஆதரவு இருந்த காலத்தில் விடுதலைப் புலிகள் அடி மட்டதிலேயே இருந்தனர். அவர்களையோ அல்லது மாற்று இயக்கங்களையோ இந்தியா வளர விடவில்லை. ஆதலால், இந்தியாதான் விடுதலைப் புலிகளை வளர்த்தது என்று உங்களைப் பெருமைப்படுத்திக் கொள்ள பொய்யான வாதங்களை வைக்க வேண்டம். அது வீண் வாதம்.
புலிகள் தாமாகவே மக்களின் ஆதரவுடன் இலங்கை ராணுவத்தின் மறைமுகமான ஆதரவுடன் வளர்ந்தார்கள்.
2. இந்தியாவிற்கு விடுதலைப் புலிகள் எதிரிகள் என்று கோசமிடுவது அரசியல்வாதிகள் தமது பதவியை தக்கவைப்பதற்கும் பிரபல்யப்படுத்திக்கொள்வதற்கும் கையாளும் குள்ளநரித் தந்திரம்.
3. இன்றும், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தின் ஒருபகுதி ஈழதமிழர்களின் கையிலேயே இருக்கிறது. இதையாரும் மறுக்கமுடியாது. ஆதலால், இன்றும், என்றும் இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டிற்கோ நல்லது செய்துகொண்டிருப்பவர்கள் ஈழதமிழர்களே...
இன்றுவரை, இந்தியா விடுதலைபுலிகளுடன் சண்டைபோட்டவண்ணமே இருக்கிறது. (கவனிக்கவும் சண்டையில் ஈடுபடுவது புலிகள் அல்ல). இதை யாம் அறிவோம். ஈழப் போராட்டத்தின் கோமாளிகளை இன்றும் இந்தியா தூசு தட்டி(?) எடுத்துவருகிறது. அதில் ஒருவர்தான் கோமாளி புஷ்பராசா.
நாங்கள் கேட்பதெல்லாம் ஒன்று:
எம்முடன் சேர்ந்து ஒன்றாய் இருங்கள். ஏனெனில், எமது வெற்றி வெகுதூரத்தில் இல்லை. அந்தநாளை நாம் கொண்டாடும் பொழுது நீங்களும் பெருமையுறலாம்...
இது எங்கள் வெற்றி...தமிழினத்தின் வெற்றி...! |
| |
|
Namakkal Ravi
7/13/2005 , 3:31:50 AM
[Comment
url]
|
காவலன் பிரமாதம்....
நம் வெற்றி...தமிழினத்தின் வெற்றி...! |
| |
|
nithi
7/18/2005 , 7:54:45 PM
[Comment
url]
|
சொ மன்ய் தொஉசன்ட் டமில் நெரெ கில்லெட் அன்ட் ரபெட் ப்ய் ச்ரிலன்கன் அர்ம்ய்.நெ நேட் ஐர்cரfட் fஒர் ப்ரொடெcட் ரெச்ட் ஒf தெ டமில் பெஒப்லெ.டிகெர்ச் நொட் த்ரெஅட் fஒர் இன்டிஅ திச் ச்டொர்ய் இச் cரெஅடெட் ப்ய் இன்டிஅன் இன்டெல்லிகென்cஎ.டிகெர்ச் அரெ fரேம் fஇக்க்டெர்ச்.இன்டிஅன் அர்ம்ய் cஅமெ டொ ச்ரிலன்க தெய் ரபெட்3000 டமில் நொமன்.Dஇட் அன்ய்பொட்ய் cஒன்cஎர்ன் அபொஉட் டமில் நொமன் லிfஎ?ஈ லொச்ட் ம்ய் fஅதெர் அன்ட் ம்ய் சிச்டெர் புட் நெ பய் கெஅவ்ய் ப்ரிcஎ ஒஉர் fஅமில்ய்.நெ லொச்ட் ஒஉர் கொமெ அன்ட் ம்ய் fஅமில்.டமில்ச் இன் ச்ரிலன்க நொட் கொஇங் டொ பென்ட் தெ கெஅட் நொபொட்ய்.நெ நில்ல் நின் தெ fரேடொம் ச்ட்ருக்க்லெ அல்ல் தெ நெச்டெர்ன் cஒஉன்ட்ர்ய் டமில் நில்ல் சுப்பொர்ட் ஒஉர் ச்ட்ருக்க்லெ.டமில்ச் டொஎச்ன்'ட் கவெ நொ cஒஉன்ட்ர்ய் .நெ நில்ல் cரெஅடெ தெ டமில் எஅலம். |
| |
|
சிந்துஷன்:)
11/28/2005 , 10:47:43 PM
[Comment
url]
|
சிறந்த கருத்துக்கள்.... சிந்தனையைத் தூண்டும் எண்ணங்கள்... கருத்துத் தெரிவித்தோர் எல்லோர்க்கும் என் நன்றிகள்:)
அன்று ஒரு தமிழன் சொன்னான் - "தமிழன் என்று சொல்லெடா, தலை நிமிர்ந்து நில்லெடா" என்று. குட்டிக் குட்டித் தமிழர் தலையை குனிய வைக்க முயன்றது சிங்களப் பேரினைவாதம். தமிழனுக்கு மானம் பெரிது, அவன் உரிமைகள் பெரிது, பிறப்புத் தந்த தாயை விட இறந்தபின் தக்கவைக்கும் தாய் மண் பெரிது.
விடுதலைப் புலிகளுக்கு "தீவிரவாதிகள்" என புதுத்தமிழில் புக௯ழ்பாடும் பித்தர்களே, புத்தரின் பக்தர்களே... அகிம்சையால் முயன்றோம்... இலக்கினை அடைய முடியவில்லை. ஆயுதம் தூக்கினோம்... இலக்கு எம்மை நோக்கி நகர்ந்தது. தமிழன் தன் நாட்டிலேயே உரிமைகள் இழந்து தவியாய்த் தவிக்கிறான் என உலகு உணர்ந்தது. "உன் கைத்தடியை வீசுவதற்கு உனக்குள்ள உரிமை மற்றவரின் மூக்கு நுனியில் முடிவடைகிறது" என்கிறது குடியாட்சி. அவர்கள் கைத்தடிகள் எம் இரத்தத்தின் சுவை கண்ட பிறகும் சிரித்துக்கொண்டிருந்தால் தமிழன்னை என்னைத் தன் புதல்வன் என்று சொல்வதில் பெருமை கொள்வாளா?
விடுதலைப் புலிகளுக்கும் இந்தியாவுக்கும் எந்தப் பாலமும் இல்லை. அதனைப் புலிகள் வேண்டியதும் இல்லை. புலிகளின் இன்றய பலத்தைப் பார்க்க பாவம் ராஜீவ் இன்று உயிருடன் இல்லை. அவர் கொல்லப்பட்டது உலகுக்கு புலிகள் விடுத்த ஒரு எச்சரிக்கை. நண்பனாய் நடித்து நரிபோல் இடையில் எதிரியாய் மாறிய வேசித்தனமெனும் கறையின் அழிப்பு. அதேயன்றி புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது. இந்தியாவுக்கும் புலிகளுக்கும் வேறெந்தப் பகையுமில்லை. ஈழத் தமிழர்கள் தான் புலிகள், புலிகள் தான் ஈழத் தமிழர்கள். உலகே இதை நீ எப்போது புரிந்துகொள்ளப் போகிறாய்?:(
"உரிமைப்போர் உடைந்ததற்காய் இல்லை ஒரு உவமை" என்பர். எமது போராட்டம் எம் இனத்துக்கானது... நாம் இழந்த உரிமைகளுக்கானது... எம் தாய்மண்ணுக்கானது... சுதந்திரக் காற்றுக்கானது... ஈழத்தமிழினத்தின் விடியலுக்கானது.
புலிகளின் தாயகம் தமி௯ழீழத் தாயகமேயன்றி வேறொன்றுமில்லை.
வந்தனங்கள்:)
|
| |
|
nishan
12/1/2005 , 1:22:57 AM
[Comment
url]
|
LTTE FIGHTING FOR TAMIL FREEDOM THEY ARE NOT TERRORIST |
| |
|
niro
12/1/2005 , 1:33:27 AM
[Comment
url]
|
nishan u r correct they r fighting for freedom we have to help them actually as a indian tamil for sri lankan tamils>>>> vaalga thamil valarga thamil |
| |
|
Vinotha
12/26/2005 , 8:02:01 PM
[Comment
url]
|
Sinthusan Theiventhiram:-) (yeh u!!!)... Im proud to be a friend of urs!!! We will go back to our eealam soon.... With all ur QM mates! |
| |
|
KALIMUTHU
12/27/2005 , 6:22:29 AM
[Comment
url]
|
நான் விடுதலைப் புலிகள் ஆதரிக்கிரன்
தமிழன் பிரகு இன்டியன்
|
| |
|
sugan
12/27/2005 , 8:12:00 AM
[Comment
url]
|
hi i am also tamil boy i like tamil tigers because they our country gardin
|
| |
|
கரிகாலன்
12/27/2005 , 9:56:53 AM
[Comment
url]
|
நாமக்கல் ரவி இன் கருத்திர்க்கு நன்றி. என்னால் இது மட்டுமே கூற முடியும். தமிழர்களுக்கு (இந்திய) மொழிப்பற்று, இன்ப்பற்று, சுயமரியாதை குன்றிவிட்டது. சுயநலம் கூடிவுட்டது. இது அழிவுன் நுழைவாயில் . |
| |
|
Namakkal Ravi
12/28/2005 , 7:32:04 AM
[Comment
url]
|
நன்றி கரிகாலன்.
Our india have problems all around us. all country around us like Pakistan, Nepal, Bangladesh, Burma are not too friendly. Srilanka is the only supportive country and if india dont support singalese we get another headache adding srilanka to the list. I think tats the reason india playing a balancing game, otherwise strategically if india loose the grip to singalese, that will endup singlese taking help from anyother regional power and totally crushing tamils
World is going to respect the strong. I wish/Prey my tamil brothers getting a separate tamil eelam comprising all tamil areas north and east as soon as possible and declare our first tamil nation asap.
Till that time people like me (indian tamil) will make sure we raising voice in every forums to make sure north indian covert politicians not playing over enthusiastic by pouring more support in all forms to singalese government + their sinister plans to pause the growth of all tamils (including you and me )
we only playing a guard role now, we tamils in india can do more but not at the moment as unfortunately TADA, PODA stop us completly coming up open. Yes a;; that is because of Rajiv, but all agree tamils wounds are much bigger than indian wounds. Anyway history is going to say it is by a tamil. So i do share the blame being a tamil
Anyway even if am pesimisstic eelam will evolve soon. Its not under anyones control
Natually the new country eelam will be supporting india without doubt, I respect and completly trust gandhi and indira are more respected in eelam than even by indians. Later i do think coins will be moved and singalese will be supported by the other buddisht power in this region.
iam not sure about the future prospect of friends of india. but i do see there is one country called eelam to be blood brothers.
United India is a country with multiple cultures, we tamils in india supported north indians for pakistan, bengalis for bangladesh, Tibet or any other cause.
we want to see we getting support as tamils.
I hope we will.. else I see the pointers are not good/grim.
hope intelligence and people in india very well aware about this though.
Tamil valzgha. Tamil Inam Valzgha
Namakkal Ravi |
| |
|
Peter
12/29/2005 , 1:14:22 AM
[Comment
url]
|
சரியாக சொன்னீர்கள். நாமக்கல் ரவி. நாமெல்லாம் முதலில் தமிழர்கள். பின்பு இந்தியர்கள்.
இப்பிரச்சனையை நமது தமிழின மனிதாபிமான கண்ணோட்டத்தில் பார்க்கவும்.
புலிகளின் வெற்றி, நம் வெற்றி...தமிழினத்தின் வெற்றி
இந்தியாவிற்கு விடுதலைப் புலிகள் எதிரிகள் என்பது 'இந்து ராம்' போன்ற் 'சிங்கள ரத்னா' களின் வேலை. |
| |
|
தமிழன்
1/7/2006 , 11:05:18 PM
[Comment
url]
|
இந்திய கப்பல்களின் உதவியுடன் தான் கடலில் புலிகளின் நடவடிக்கைகளை சிங்கள தேசம் எதிர்க்கின்றது. ஆனால் இது வரை புலிகள் பதிலுக்கு இந்திய இராணுவத்தை தாக்கியதில்லை. ஆனால் சிலர் ஆய்வாளர் எனக் காட்டிக் கொள்பவர்கள் வீண் பீதிகளை ஏற்படுத்துவது வேதனை |
| |
|
raman
1/8/2006 , 2:03:01 AM
[Comment
url]
|
1980 ஆன்டுகலிலிருந்து தமிழினத்திர்க்கு சிங்கலவ படையினரல் இழைக்கப்பட்ட கொடுமைகலும், உயிர் இழப்புக்கலும் இனியும் எம் தமிழினதிர்க்கு ஏர்ப்படக்கூடதென தர்காப்புக்கென நடவடிக்கை எடுக்க யாருக்கும் உரிமை தமிழருக்கு உன்டு. ஸுதந்திரம் பெட்ர நால் முதல் படிப்படியாக தமிழர் உரிமை சிங்கல தீவிரவாதிகலால் பரிக்கப்பட்டு இன்ரு புலம் பெயர்ந்த தமிழர்கல் புலிகலுக்கு உதவுவதில் தப்பும் தவரும் எதும் இல்லை. தனி நாடே சரியான தீர்வு. அதர்க்காக எடுக்கும் எந்த நடவடிக்கயும் நல்ல நடவடிக்கையே. இந்தியா உதவ வென்டுஅதில்லை. ஆனால் தலையிடாமல் இருந்தாலே போதும். மட்ட்ர நாடுகலின் தலையேடும் இல்லமல் இருந்தால் இலங்கை தனது ப்ரச்னைகலை தானாகவே தீர்துக்கொல்லும். போதும் தமிழினம் பட்ட வேதனை. |
| |
|
karumpuli
1/16/2006 , 4:03:52 PM
[Comment
url]
|
வனகம் இந்தியா என்பது எபொலுதுமே தமில் மக்கலயோ ஒலுன்கா வாலவிடாது. ஏனென்ரல் தமிலர்கல் நன்ரக வல்வது இந்தியாவல் பொருதுகொல்ல முடியாது. but some people in tamil nadu always giving their voice for the eelatamil people. people in south india's are good but the indian government |
| |
|
Raja Eela Tamilan from UK
2/1/2006 , 10:05:44 AM
[Comment
url]
|
LTTE know to design their own plane. They try to fly an helicopter in 1995 in ValvetiThurai. But that helicopter just fly about 10 meeter. IN 1997 THEY FYL THEIR HELICOPTER OVER THE MAVEERAN THJULIM ILAM WHICH IS IN MULIJAVALAI. They know to design a plane too. They dont have to spend more money or they dont have to buy a plane from others. |
| |
|
Raja Eelam boy UK
2/1/2006 , 10:11:08 AM
[Comment
url]
|
India dont want Eelam Tamils to get a Seperate country. India Scared from that. A Small Amount of tamil people fighting for their rights in S L. IF they get a Seperate country. India Thing That Tamil Nadu Tamils Will Start To Thing Why Dont we Live Spearate. India Scared What will happen if tamils start to ask a seperat country in Tamil Nadu.
|
| |
|
இனியவன்
2/24/2006 , 2:27:03 PM
[Comment
url]
|
வணக்கம் இந்த பகுதியை இன்று தான் முதல் முதலாக பார்த்தேன். ஆரோகியமான விடயம். ம்ம்ம்... அந்த தமிழ்நாட்டு நன்பர் நினைப்பதில் தவறு இல்லை. ஏன் என்றால் அவர் தன்னுடய மண்ணில் இருந்து தனக்காக சிந்திக்கிறார்.அவரை பொறுத்தவரை சரியாக இருக்கலாம்.ஆனால் நாம் சொல்வதையும் கருத்தில் எடுப்பது நல்லது வீனான கற்பனைகளை மூட்டை கட்டிவிட்டு ஒரு மூலையில் போட்டு விட்டு நியாயமாக கதைப்போமே!!! இந்தியா ஒரு நாடு அது தன்ர நலனிலதான் கன்னாயிருக்கும். தவறு இல்ல எந்த நாடும் அதைதான் செய்யும். அவர்களின் நலனிற்காக் அவர்கள் கை வைத்த (இனம்)இடம் தான் அவர்களுக்கு தொல்லை தொடங்கியது. அவர்கள் மறைமுகமாக புலிகளுக்கு மற்றும் விடுதலை அமைப்புகள் என்று வேட்டியை தூக்கி கட்டியவர்களுக்கு எல்லாம் பயிற்சி அளித்து தான் கை காட்டிய திசைகளுக்கு ஏவல் நாய் மாதிரி வைத்திருக்க ஆசைப்பட்டது அனால் நினைத்த மாதிரி புலிகள் மட்டும் வளைந்து கொடுகிற மாதிர்ய் தெரியவில்லை அனால் இந்தியா அதை அப்போது இவ்வளவு நிலமைக்கு வரும் என்டு கனவு கூட கன்டிருக்காது . என்பது தான் உன்மை அன்றைய நிலையில் புலிகள் மனதளவில் மட்டுமே பலம் வாய்ந்தவர்களாக இருந்தார்கள் அனாலும் புலிகளின் பலம் பலவீனம் அறிய இந்தியா புலணாய்வுதுறை முயன்றதை மறுக்க முடியாது. அதை அடுத்து பார்ப்போம் தொடரும்.... |
| |
|
இளந்திரயன்
2/24/2006 , 6:38:08 PM
[Comment
url]
|
நண்பர்களுக்கு வணக்கம், நல்லதொரு கருத்துப் பரிமாற்றம். இந்தியாவிற்கு (இந்திய நடுவண் அரசுக்கு) இருப்பது. ஆயுதம் பற்றிய பயம் அல்ல. அப்பாவி இந்தியக்குடிமக்களுக்கு விளங்கும் வகையில் காட்டும் உதாரணம் தான் அது. உண்மையில் இருப்பது கருத்தியல் ரீதியாக ஏற்படக் கூடிய பயம். தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு ஆட்சி இலங்கையில் ஏற்படுமாயின் அவ்வுதாரணம் இந்தியாவிலும் ஒரு போராட்டத்தை ஏற்படுத்தக் கூடும் என்று பயப்படுகிறார்கள். உண்மையில் அப்படி இல்லை என்பதை வட இந்தியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்திய ஆட்சியாளர்கள் நம்ப மறுக்கிறார்கள். சுதந்திரத்துக்குப்பின்னான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பின்னர் மறைந்துபோன தமிழ் இராட்சியம் மற்றும் ஹிந்தி எதிர்ப்பிப் போராட்டங்கள் தான் காரணம். சூடு கண்ட பூனைகள் அவர்கள். தமிழ்நாட்டிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் தமிழ் ஈழத்துக்கான எதிர்ப்பு- இப்படி நான் சொல்வதர்கு காரணம் இருக்கின்றது. இப்பொழுது புலி எதிர்ப்பு என்று கூறுபவர்கள் ஒரு கதைக்கு வேறு ஒரு தலைமையில் ஈழத்துக்கான போராட்டம் முன்னெடுக்கப்பட்டாலும் அப்போதும் வேறு ஏதோவொரு காரணத்துக்காக எதிர்ப்புக் காட்டுவார்கள். காரணம் இந்தியாவின் மேலாண்மையை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் விரும்புபவர்கள் இவர்கள். இந்தியா ஒரு வல்லரசாகும் ஆகவேண்டும் எனக் கனவு காண்பவர்கள் இவர்கள். இவர்கள் ஒன்றை மிகத் தெளிவாகவே உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் வல்லரசுக் கனவிற்கு இப்போதும் எப்போதும் எதிராக இருப்பவர்கள். ஈழத் தமிழ் மக்களில்லை. அது பாகிஸ்தான் அதன் பிற்பாடு பங்களாதேசம், சீனா இத்தனை நாடுகளையும் உலக வரைபடத்தில் இருந்து துடைத்தெறிந்த பின்னரே உங்கள் கனவுகள் ஈடேறுபது சாத்தியம்.
ஈழத்தில் நடைபெறும் போராட்டம் இன விடுதலைக்கானது. இது வல்லரசாவதற்கான போராட்டம் அல்ல. நான்கு நபர்கள் பயணம் செய்யும் விமானம் கல்பாக்கம் அணுமின் உற்பத்தி நிலையத்துக்கான ஆபத்து என்று முழங்கும் கட்டுரையாளரின் சிந்தனை சிறுபிள்ளைத் தனமான நகைப்புக்கிடமானது. பாகிஸ்தானிலிருந்தும் சீனாவிலிருந்தும் ஏற்கனவே ஏவுகணைகள் குறிவைத்திருப்பதை வசதியாக மறந்து விட்டார் போலும். சென்னையிலும் கேரளாவிலும் என்ன இந்தியாவின் பொருளாதார மையமா இருக்கின்றது. தாக்குதல் நடாத்த விடாது காத்துக் கொள்ள.
60 வருடப் பகையை மறந்து பாகிஸ்தானுடன் பஸ் விட்டு உறவை மேம்படுத்தத் துணிபது ஆட்சியாளர்களுக்கு திடீரென்று வந்த கருனையினாலா? பயம் ஐயா பயம். முரட்டுப் பாகிஸ்தானி அணுகுண்டை அனுப்பிவிட்டால் என்ன செய்வது என்ற பயம். இந்தியா வல்லரசு என்று ஒத்துக் கொண்டாலும் எத்தனை பெரிய வல்லரசு. பாகிஸ்தான் ஒரு மத அடிப்படைவாத நாடு. வறுமைக் கோட்டின் கீழேயே வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள். ஆறு யுத்தங்களிலும் பாகிஸ்தானுடன் எதைச் சாதித்து விட்டீர்கள். வரட்டுத்தனமான கர்வத்தில் பாகிஸ்தானையும் அணு ஆயுத நாடாக வளர்த்து விட்டு இன்று கையைப் பிசைந்து கொண்டிருக்கிறீர்கள்.
பாகிஸ்தானும் அல்லல் படுகின்றது. நீங்களும் அல்லல் படுகின்றீர்கள். அகிம்சையில் உருவான நாட்டைச் சுற்றி அத்தனையும் பகை நாடுகள். நாம் நட்பாய் இருக்கும்போது எம்மைச் சுத்தியிருக்கும் அனைவரும் பகையாளியாவதில்லை. நடுவண் அரசின் தொலை நோக்கற்ற அரசியல் முடிவுகள் இந்த நிலமைக்கு கொண்டு வந்திருக்கின்றது. யாராவது இந்தியத் தமிழ் மக்களிடம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்று கேட்டிருக்கின்றார்களா? இல்லை நீங்கள் தான் சொல்ல முடியுமா?
பலங்குறைந்தவர்களை பலசாலிகள் மிரட்டுவது போன்றது தான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை. இல்லையென்றால் இந்தியா வலிந்து உருவாக்கி விட்ட பங்களாதேசத்துடனும் எல்லைப் புறத்தில் ஏன் சண்டை பிடிக்கிறீர்கள்.
இரஜீவ் காந்தியின் கொலை என்கிறீர்கள். சரி இந்திரா காந்தியை கொன்ற சீக்கீயர்களை எல்லாம் இல்லாது செய்து விட்டீர்களா? எந்த நம்பிக்கையில் ஒரு சீக்கியரிடமே ஆட்சியதிகாரத்தையே கொடுத்திருக்கின்றீர்கள். பொதுவில் மனிதர்கள் யாரும் தீயவர்கள் இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலையால் தீங்கு விளைவிக்க முயல்கிறார்கள். கல்லால் எறிந்தால் காக்காயும் கொத்தத்தான் செய்யும். அதர்காக காக்காவுடன் தொடர்ந்து சண்டை போடுவீர்களா?
பலமிருக்கிறது என்பதற்காக சீண்டலாம் என்பது இல்லையே. இந்திய நடுவண் அரசும் புத்தி ஜீவிகளும் செய்வது காரண காரியங்களிற்கு அப்பால் பட்ட சீண்டல் தான். ஓடித் தப்ப முடியாது என்றால் எதிர்த்து நிற்பது தான் இறுதி வழி. அழிந்தாலும் சரி வென்றாலும் சரி. வியற்நாம், இன்று ஈராக். அதுதான் நடந்து கொண்டிருக்கின்றது. ஈழத்திலும் அது தான் நடந்தது. இன்னுமொரு முறை அப்படி நடப்பது நடக்காததும் இந்தியாவின் கையில்த் தான் இருக்கின்றது. இன்றும் சீண்டிக் கொண்டிருப்பது இந்தியாதான். 1991 இல் இரஜீவின் மரணத்தின் பின் ஈழத்தமிழ் மக்களினால் என்ன துன்பம் நேர்ந்தது என்று கூற முடியுமா ? ஈழத்தமிழ் மக்களிடம் ஒரு பட்டியலே இருக்கின்றது.
வரட்டுத் தனமான வாதங்கள் தெளிவிற்கு இட்டுச் செல்லாது. இந்தக் கட்டுரையில் அதிகமான விடயங்கள் அபத்தமானதும் அதிகப் பிரசங்கித் தனமானதும். இந்தியாவின் ஆசை அல்லது கட்டுரையாளரின் ஆசையாகத் தான் பார்க்க முடிகின்றது. ஆசைப் படுவதை யாரும் தடுக்க முடியாது. எங்களுக்கும் நிறைய ஆசைகல் இருக்கின்றது. யாருடைய மனதையும் புண்படுத்துவது நோக்கமல்ல. இராணுவம் என்பது அரசியந்திரத்தின் அடக்கு முறைக்கான ஆயுதம். சொந்த மக்களைக் கொண்டிராத அந்நிய இராணுவம் அங்கிருக்கின்றதென்றால் அதன் அர்த்தம் அங்கு அடக்கு முறை நிகழ்கின்றது என்பது தான். |
| |
|
Thiru
2/25/2006 , 9:53:49 AM
[Comment
url]
|
முதலில் விடுதலைப்போரையும், தீவிரவாதத்தையும் பிரித்து பார்க்க பழகுங்கள்! இந்து நாளிதளின் அறிவு மேதாவி ராம் அவர்கள் கண்களுக்கு சேகுவேரா, பிடல் புரட்சியாளர்களாக தெரிவார்கள். நமது பக்கத்து நாட்டில் விடுதலை போராட்டம் என்றால் அது தீவிரவாதமா? தமிழர்கள் என்றால் பிராமணீய கண்களில் பகைவருவது இயற்கை. இது இனத்தின் குணம். தமிழீழ மக்களின் வேதனையை காண ஒருமுறை தமிழீழம் சென்று வாருங்கள் அப்போது அவர்களது வேதனை விளங்கும். இப்படிப்பட்ட கருத்துக்களை பரப்பி இந்திய தேசியம் என்ற மாயை அழிந்து விடுமென பூச்சாண்டி காட்டுவதை பார்க்கையில். இந்திய துணைக்கண்டத்தில் பிறந்த ஒருவன் என்ற முறையில் வெட்கப்படுகிறேன், வேதனையடைகிறேன்.
அன்புடன் திரு |
| |
|
Slave of God
2/26/2006 , 2:20:34 AM
[Comment
url]
|
Indians should realise the threat LTTE poses to them and should come forward to support Sinhala Muslim alliance...... Recognising Muslims as a seperate nation and severing all the links with the rest of the tamil terrorists is the only way to contain the LTTE menance...... If Muslims are granted a homeland then eelam would be only a stillborn baby and India can heave a sigh of relief......
oru unmaiyana muslim |
| |
|
tamilan
2/26/2006 , 5:19:06 PM
[Comment
url]
|
LTTE and singlese government should consider giving a autonomous provinces like scotland,whates in UK for muslims (muslims can choose to stay with country eelam or srilanka)
after all muslims are another set of tamil people. tamil muslims in srilanka have to understand the bargaining voice is noticed only because of eelam struggle.
lets all tamils be united as tamilans..with one lnaguage ..one culture.. one food...lot of things are in common ....if religion creates divisions lets discuss it on the table
(note:- its ugly singalese & tamil paramilitary for a suitcase money raising voice against LTTE like this... now tamil people and LTTE are no different.. all are one.. please understand the ground reality...0.005% cannot make any difference..however iam sure LTTE should be readyh to hear you, allign with tamil rather with singalese)
|
| |
|
Slave of God
2/27/2006 , 12:46:06 AM
[Comment
url]
|
tamilan,
you donot understand ISLAM and history of muslims in srilanka. ISLAM doesnot recognise language, race, country etc etc. WE ARE ALL PART OF ONE BROTHERHOOD ... ISLAMIC BROTHERHOOD. The muslims of srilanka are not tamils. We acquired tamil as a language to communicate with people around for doing business. Try to understand our origins.. we are not tamils. Tamil is a language spoken by us and even then our tamil is different from the tamil spoken by kafirs. |
| |
|
S.O.G
2/27/2006 , 12:53:02 AM
[Comment
url]
|
"புலம் பெயர் நாடுகளில் இருக்கும் அனேகமான தமிழர்களுக்கு இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான மயக்கமே இருக்கிறது. அவர்கள் தமிழ் பேசுவதால் தமிழர்கள் தான் என்று அடம்பிடிக்கிறார்கள். இலங்கையில் இஸ்லாமியர்களாகவே அடையாளம் காணப்படுகிறார்கள். கலைகலாச்சாரப் பாரம்பா¤யங்களின் வேற்றுமை. இலங்கையில் முஸ்லிம்கள் தனி இனமாகவே பிரகடனப்பட்டிருப்பதை பொதுவான புலம் பெயர் தமிழர்களால் இன்னும் ஏற்றுக்கொள்ளவே முடியாதுள்ளது."
Ilaiya Abudullah.
http://www.thinnai.com/pl1111051.html
|
| |
|
tamilan
2/27/2006 , 7:29:57 AM
[Comment
url]
|
SlaveofGod, I cannot stop you...please do whatever you love to do -:) ... may be one day if you feel a tamil then plese come here.. till tat time there are lots of muslim websites availalable in the universe.. please get in there, you can find like minded people..
(tamil makkale - sorry for typing in english) |
| |
|
புலிகள்
3/1/2006 , 9:29:03 AM
[Comment
url]
|
1. புலிகள் = ஈழ தமிழ் மக்கள்
|
| |
|
சீனு
3/2/2006 , 10:53:12 AM
[Comment
url]
|
உருப்படியாண ஒரு கருத்துப் பரிமாற்றம். நன்றி. ஆனால், இது இந்தியத் தமிழர்கள் Vச் இலங்கைத் தமிழர்கள் என்று பொருள் கொள்ளாமல், (//தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு ஆட்சி இலங்கையில் ஏற்படுமாயின் அவ்வுதாரணம் இந்தியாவிலும் ஒரு போராட்டத்தை ஏற்படுத்தக் கூடும் என்று பயப்படுகிறார்கள்.//) ஆக்கப்பூர்வமான விவாதமாகவே எடுத்துக் கொள்ளவேண்டும்.
நன்றி,
சீனு. |
| |
|
இனியவன்
3/3/2006 , 6:48:31 AM
[Comment
url]
|
தேவையற்ற சந்தேகங்களால் இந்தியா பகையாளிகளைக் கூட்டிக்கொள்ளப் போகின்றது என்று சொல்வதை விட இதில் என்ன இருக்கிறது. எது எப்பிடி என்டாலும் இதில் இந்தியாவின் செயலால் அது தன் கையை சுட்டுக்கொள்ள போவது உறுதி. |
| |
|
Ilanthamilan
3/6/2006 , 11:25:15 PM
[Comment
url]
|
த.ஈ.வி.பு கல் ஒன்ரும் புனிதர்கலோ வீரர்கலோ அல்ல. அவர்கலும் சந்தர்ப்பவதிகலே. தங்கல் நலதிட்கும் உயிர்வால்விர்குமே இன்ட்ரு போரிடுகின்ரர்கல். இந்திஅ இரானுவம் அவர்கலை அழிக்க போகுது என்னும் போது இலன்கை அரசிடம் கையேந்தியவர்கல் தான் இந்த த.ஈ.வி.பு கல். இன்ரு உதவுவார் ஒருவரும் இல்லாமல் தம் மக்கலை அடிமைகல் போல் அடக்கி ஒடுக்கி வைத்திருக்கின்ரனர் தமது உயிர் வாழ்வுக்காக. இன்ரு யாரவது இவர்கலுக்கு அரிவுரை கூர அனுமதிப்பார்கலா? இவர்கலது நடவடிக்கைகலை பிழை கூரினால் எவராயினும் உடனே கொல்ல படுவார்கல். இது தமிழ்னுக்கு நல்ல பெருமை. இந்திய தமிலனாவது இந்த முட்டால்கலை பார்த்து உனர்ந்து நடப்பது நல்லது |
| |
|
இனியவன்
3/11/2006 , 4:42:25 AM
[Comment
url]
|
நீங்கள் என்ன பெரிய யோக்கியமா?ஏன் கனக்க நாளுக்கு போவான், ஈரான் நிலமை என்ன? தெரியாதா இளந்தமிழா உங்களுக்கு? என்ன சொல்ல போறீங்க நன்பா? இராசதந்திரமா (???) தெரியுமே உங்கட கண்ணுக்கு நீங்க செய்தா அது அதாக தான் இருக்கும் ( என்ன நியாயம் அய்யா இது |