|
(வஞ்சி விருத்தம் - தேமா, கூவிளம், கூவிளம்)
தேர்வி லெத்தனை மாணவர் ஓர்ந்த வெற்றியைத் தேடியே ஆர்வ மேவிடக் கற்கிறார்; சீர்மைக் கல்வியை நாளுமே! ஈண்டு பெற்றிடும் தோல்வியுந் தாண்டி நெஞ்சக வன்மையால், மீண்டும் வெற்றியைத் சேர்வதே; நீண்ட கல்வியின் பாடமாய்ப் பள்ளித் தேர்வினில் தோற்றவர், வெல்லு மூக்கமே சோர்ந்திடா துள்ளம், மீளவுந் தேர்வதே நல்ல மாணவர் தன்மையாம்!
|