ஜூன் 30 2005
தராசு
வ..வ..வம்பு
டெலிவுட்
முச்சந்தி
கட்டுரை
அமெரிக்க மேட்டர்ஸ்
அறிவிப்பு
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
ஹாலிவுட் படங்கள்
கவிதை
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
திரைவிமர்சனம்
கவிதை
துணுக்கு
அடடே !!
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : கணங்களில் சில
- சத்தி சக்திதாசன் [sathnel.sakthithasan@bt.com]
| Printable version | URL |

கணங்களில் சில
கனமானவைதான்
காரணம் கேட்காதே
கண்மணியே
கண்களின் ஓரத்தில் துளிர்க்கும்
கண்ணீர் கனத்தினால் விளைந்த
கலக்கத்தின் விளைச்சல்தான்

சொல்ல முடியாத வார்த்தைகளினால்
சொல்லவொண்ணாத துயரங்களை
சொல்லில் வடிக்க முயலும்
சோகத்தின் மறு உருவின் ஆதங்கம்
சொந்தங்கள் கீறிய புண்களால்
சோதனையான வடுக்களை
சோதித்துப் பார்த்திடும் வேளைதான்
சொல்ல முடியாக் கணங்களில் சில ...

மூடிடும் விழிகளில் இல்லை உறக்கம்
மூடியும் அணையா காலதீபம்
முந்தைய நிம்மதி இன்றைய உலகில்
முழுதுமாய் இழந்த
முதுமையின் நிலை
முழுமதி நோக்கினால் ஏனோ
முகில்கள் மறைக்குது
முகிழ்த்த நினைவுகளின் கணங்களில் சில
முற்றாய்த் தருவது
முழுவதும் துன்பமே !

காத்திருக்கிறேன் கரையினிலே
காற்றின் திசை மாறிடும் போது
கனத்த இந்தக்
கணங்கள் சில
கணநேரமாவது இலாசாகிடும் என்றே

 

 

      

உங்கள் கருத்து  
Belson
1/17/2006 , 8:23:18 AM

 [Comment url]
சந்தம் இக்கவியில் சரள்மாய் விள்யாட புலவன் நல்ல செய்யுள் படைதுளார்
   
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |