ஜூலை 29 2004
தராசு
வேர்கள்
மேட்ச் பிக்சிங்
காந்தீய விழுமியங்கள்
வானவில்
பருந்துப் பார்வை
கட்டுரை
பெண்ணோவியம்
முத்தொள்ளாயிரம்
சிறுகதை
க. கண்டுக்கொண்டேன்
கட்டுரை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    மேட்ச் பிக்சிங் : விக்கெட் கீப்பர் குழப்பம்
    - பத்ரி சேஷாத்ரி
    | Printable version |

    இந்தியாவின் மிக நம்பகமான பேட்ஸ்மேன் ராஹுல் திராவிட். பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் (PwC) ரேட்டிங் படி டெஸ்டு போட்டிகளில் உலகின் 'நம்பர் ஒன்'னாகவும், ஒருநாள் போட்டிகளில் ஏழாவதாகவும் இருப்பவர். இந்திய அணி நிர்வாகம் ஒருநாள் போட்டிகளில் சரியான கலவை இருக்க வேண்டுமென்பதற்காக திராவிடை அவரது விருப்பத்திற்கு மாறாக விக்கெட் கீப்பிங் செய்யத் தூண்டிக்கொண்டிருக்கிறது. திராவிட் ஒரு சிறந்த டீம் பிளேயர் என்பதனால் விருப்பமில்லாவிட்டாலும் அணி நிர்வாகம் வேண்டும் போதெல்லாம் கீப்பிங் செய்கிறார்.

    அவர் எப்படி கீப்பிங் செய்ய வந்தார் என்பதை நாம் சிறிது கவனிக்க வேண்டும். ஒருநாள் போட்டிகளுக்கு திராவிட் சிறிதும் லாயக்கற்றவர் என்ற எண்ணம் அப்பொழுது இந்திய அணி நிர்வாகத்திடம் இருந்து வந்தது. அதற்கு இடமளிக்கும் வகையில் திராவிட் தன் ஆரம்ப நாள்களில் ஒருநாள் போட்டிகளில் மிக மெதுவாக விளையாடிக் கொண்டிருந்தார். ஆட்டத்தை சுழற்றிக்கொண்டிருக்குமாறு ஒவ்வொரு பந்திலும் ஒரு ரன்னை எடுப்பது திராவிடுக்கு அப்பொழுது சிறிதும் கைவரவில்லை. ஒவ்வொரு பந்தையும் நேராகப் பந்துத் தடுப்பாளர் கையில் அடித்துவிட்டு பரிதாபமாக நின்று கொண்டிருப்பார். அதனால் அவ்வப்போது ஒருநாள் போட்டி விளையாட வருவார், பின்னர் அணிக்கு வெளியே இருப்பார்.

    2001/02 மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணி நிர்வாகம் உலகக்கோப்பை 2003ஐ மனதில் வைத்து இனி திராவிடை விக்கெட் கீப்பராக்கி விடலாம் என்று முடிவு செய்தனர். அதற்கு முன் கூட அவ்வப்போது  திராவிட் (ஒன்பது) ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பராக இருந்திருக்கிறார்.

    ஆனால் இன்றைக்குப் பார்க்கும்போது திராவிட் ஒருநாள் போட்டிகளிலும் முன்னணி வீரராக உலக அளவிலேயே இருக்கிறார். PwC ரேட்டிங்கில் உலக அளவில் ஏழாவது, இந்தியாவில் டெண்டுல்கர் ஒருவர் மட்டும்தான் திராவிடுக்கு மேல், உலக அளவில் நான்காவது. ஆனால் அப்படியிருந்தும், இந்திய அணி நிர்வாகம் தன் வசதியைக் கருதி திராவிட் தலையில் மீண்டும் மீண்டும் விக்கெட் கீப்பிங்கைத் திணிக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் இந்தியாவால் திறமையான ஒரு விக்கெட் கீப்பரைக் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதே.

    குழந்தை முக பார்த்திவ் படேல் இப்பொழுது இந்தியாவின் முன்னணி விக்கெட் கீப்பராகக் கருதப்படுகிறார். ஆனால் இதுவரை ஒருநாள் போட்டிகளில் இவர் விளையாடிய போதெல்லாம் நமக்குக் கிடைத்திருப்பது ஏமாற்றமே. சொல்லப்போனால் டெஸ்டு போட்டிகளிலும் இவரிடமிருந்து நமக்குக் கிடைத்திருப்பது ஏமாற்றம்தான். இன்னும் இவர் இந்திய அணியில் இருப்பதற்குக் காரணம் தீவிரமான போட்டி வேறு யாரிடமிருந்தும் வராதிருப்பதே. பார்திவ் படேலுக்கு முன் இந்தியா தீப் தாஸ் குப்தா, அஜய் ராத்ரா ஆகிய இருவரையும் பயன்படுத்தியது. தீப் தாஸ் குப்தா மிக மோசமான விக்கெட் கீப்பர். அஜய் ராத்ரா சுமார்தான். இருவரும் டெஸ்டு போட்டிகளில் ஆளுக்கொரு சதம் அடித்துள்ளனர். இதில் அஜய் ராத்ராவுக்கு மீண்டும் வாய்ப்பளித்துப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. இவர் படேலை விட சற்றே திறமை வாய்ந்த பேட்ஸ்மேன் என்று நான் கருதுகிறேன்.

    அதே நேரத்தில் புதிதாக சிலரையும் முயன்று பார்க்க வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் என்பவர் இப்பொழுது இந்தியா-ஏ அணியுடன் ஜிம்பாப்வே, கென்யா நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இவர் இதுவரை ஒரு சீஸன்தான் ரஞ்சிக்கோப்பை விளையாடியுள்ளார். அதிலும் மிக நேர்த்தியாக பேட்டிங் செய்துள்ளார். இவருக்கும் சர்வதேச அளவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஒருவேளை பார்திவ் படேலை ரஞ்சிக்கோப்பை விளையாட்டுகளில் ஓரிரு வருடங்கள் விளையாட வைப்பது அவருக்கே நன்மை பயக்குமோ என்றும் தோன்றுகிறது. ஓர் ஆத்திர அவசரத்தில் ஒரு ரஞ்சி ஆட்டம் கூட விளையாடாத படேலை சர்வதேச அளவிற்கு எடுத்துச் சென்றது இந்திய அணி நிர்வாகம். அன்று முதல் இன்றுவரை முறையான பயிற்சி இல்லாது படேல் வீணாகிப் போய்க்கொண்டிருக்கிறார் என நான் நினைக்கிறேன்.

    திராவிட் இந்தியாவைப் பொருத்தவரை மிக முக்கியமான விளையாட்டு வீரர். அவரை விக்கெட் கீப்பிங் செய்ய வைத்து அவரது சக்தியை வீணடிக்கிறோம் எனத் தோன்றுகிறது.

    ஒருநாள் போட்டிகளில் வேறெந்த நாடும் இதுபோல் தாற்காலிக விக்கெட் கீப்பரை வைத்துப் பொழுதை ஓட்டுவதில்லை. ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட், இலங்கையின் குமார் சங்ககாரா ஆகியோர் தனித்திறமை வாய்ந்த மட்டையாளர்களும் கூட. மற்ற நாடுகளின் விக்கெட் கீப்பர்கள் யாரும் இந்த அளவிற்குச் சிறந்த பேட்ஸ்மேன் இல்லையென்றாலும் கச்சிதமான விக்கெட் கீப்பிங் திறமை பெற்றவர்கள். இந்தியா மட்டும்தான் இந்த இரண்டும் இல்லாமல் ஒரு முன்னணி, அதுவும் மிக முக்கியமான, உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனை கையில் கிளவ்ஸ் போடச் சொல்லிக் கேவலப்படுத்துகிறது.

    ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை செப்டம்பர் 2004க்கு முன்னால் இந்திய அணி மாற்று ஏற்பாடுகளைச் செய்வது அவசியம்.

    உங்கள் கருத்து  
    வந்தியத்தேவன்
    7/30/2004 , 3:26:02 AM

     [Comment url]
    பத்ரி,

    யோசிக்க வேண்டிய விஷயம். ராகுல் விருப்பமின்றி கீப்பிங் செய்கிறாறென்பது வேதனைக்குரியது. நமது கிரிக்கெட் வாரியத்தின் தரம் தெரியாதா? ராகுல் கீப்பராய் ஓட்டை விடும் ஓட்டங்கள், கோட்டை விடும் கேச்சுகள் போட்டியின் போக்கையே மாற்றிவிடும் அபாயம் எப்போதும் உண்டல்லவா? பூனைக்கு (இந்திய கிரிக்கெட் வாரியம்) யார் மணி கட்டுவது???

    வேதனையுடன்,
    வந்தியத்தேவன்.
       
    Mahesh
    7/30/2004 , 8:03:23 AM

     [Comment url]
    நல்ல கட்டுரை. இதற்கு எதற்கு 'மாட்ச் ஃபிக்ஸிங்' என்ற தலைப்பு :-) கிரிக்கெட் - சில எண்ணங்கள் என வைக்கலாமே
       
    Ram
    8/2/2004 , 4:34:08 PM

     [Comment url]
    ஆருமையான கட்டுரை. வழ்த்துக்கல்.
       
    Kannan
    8/3/2004 , 3:01:49 AM

     [Comment url]
    பத்ரி,

    மிகச் சரியாகச் சொன்னீர்கள். திராவிட் ஸ்டம்ப்களின் பின்னே ஒரு இன்னிங்ஸ் முழுதும் நின்று, நம் பந்துவீச்சாளர்கள் கட்டுப்பாடின்றி போடும் லெக் ஸைட் வொய்ட்களைத் தாவிப்பிடித்தே களைப்படைவார். இதுமட்டுமல்லாமல், ஒரு முழு நேர கீப்பர் தவறவிடாத ஸ்டம்ப்பிங், மற்றும் காட்ச் வாய்ப்புக்களை, சில சமயம் விட்டுவிடுவதும் அவர் மனத்தை உறுத்தலாம்.

    ஆனால், இந்திய அணியின் தேர்வுக்குழு, பயிற்சியாளர் மற்றும் காப்டன் ஏற்கனவே formidable ஆன ஒரு மட்டையாளர்கள் அணிவகுப்பு இருக்கும்போது, ஏன் திராவிட் கீப்பிங் செய்யவேண்டும் என்று நினைக்கிறார்கள்? ஒரு மட்டையாளர்/கீப்பர் combinationஐ விட, regular keeper, மற்றும் ஒரு மட்டையாளர் / பந்துவீச்சாளர் என்ற all-rounderஐ தேர்வு செய்யலாமே? நமது பந்துவீச்சு "பல் போன"தொரு விஷயம் இல்லையா? இந்த ஹீனமான தாக்குதலை வைத்துக்கொண்டு "போட்டுக்" கொடுத்து, நம்மாட்கள் ஓடிக் களைத்து பாட்டிங் செய்ய வந்தால் திணரத்தானே செய்வர்? ஆஸ்திரேலியா என்றதும் நினைவுக்கு வரும் மெக்ரா, தென்னாப்பிரிக்கா என்றதும் நினைவுக்கு வரும் பொல்லொக் போன்று, மற்றவர் பயப்படவும், நிறைய யோசித்து strategy அமைத்து ஆடவும், மற்ற அணிகள் மதிக்கும் ஒரு பந்துவீச்சாளர் கூட இன்னும் நம்மிடையே இல்லை (சுழல் பந்து வீச்சை நான் சொல்லவில்லை - அதற்கு இப்போது நிறைய options உள்ளது - சேவாக் முழுநேரப் பந்துவீச்சாளர் ஆகவேண்டும் என்று நினைக்கிறேன்) இர்ஃபான் பதான் நிறைய நம்பிக்கை அளிக்கிறார்.

    இந்தப் பின்னூட்டம் நீண்டு விட்டது. என் எண்ணம்: பலப்படுத்த வேண்டியது பந்த்துவீச்சு departmentஐ; பலமிழக்காமல் காக்க வேண்டியது திராவிட்டை..
       
    பத்ரி
    8/4/2004 , 8:11:41 AM

     [Comment url]
    மஹேஷ்: 'மேட்ச் பிக்ஸிங்' என்ற தலைப்பு இந்தக் கட்டுரைக்கு அல்ல. இந்த பத்திக்கான ஒரு தலைப்பு... கணேஷ் சந்திரா என்னிடம் இந்தக் கட்டுரைத் தொடருக்கான பேரைக் கேட்டபோது மனதில் தோன்றியதுதான் இந்தத் தலைப்பு. மூக்கைச் சுற்றி ஒரு விளக்கம்: சிகரெட், காபி போன்ற பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சிகரெட் பிடித்தே ஆக வேண்டும், காபி குடித்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் வேறு வேலை எதுவும் ஓடாது. 'I have had my fix' என்று சொல்வார்கள் அல்லவா, அதுபோல.

    இந்த கிரிக்கெட் பற்றிய பத்தி இந்த வாரத்துக்கான கிரிக்கெட் fix... அவசியம் வேண்டும், இதைப் படிக்காவிட்டால் வேறு வேலை எதுவும் ஓடாது ("நெனப்புத்தான் பொழப்பக் கெடுக்குதாம்!"). அதைக் கொஞ்சம் இழுத்து வைத்ததுதான் "மேட்ச் பிக்சிங்". ரொம்ப கண்டுக்காதீங்க...
       
    பத்ரி
    8/4/2004 , 8:24:28 AM

     [Comment url]
    கண்ணன்: மற்ற நாடுகள் பயப்படும்படியாக நம்மிடம் ஒரு பவுலரும் இல்லை என்று நீங்கள் சொல்வது சரிதான். அதனால்தான் நாம் அதிக அளவு பேட்டிங்கில் ஆட்கள் வேண்டும் என்று திராவிடைக் கொடுமைப்படுத்துகிறோம்.

    மேலும், திராவிட் ஒரு மேட்சுக்கு ஒரு ஸ்டம்பிங், ஒரு ரன் அவுட், ஒரு கேட்ச் என்று கோட்டை விடுகிறார். அதுவும் நீங்கள் சொல்வது போல அவர் பேட்டிங் செய்யும்போது அவரை பாதிக்கலாம்.

    இர்பான் பதான் போல இன்னமும் இரண்டு நல்ல பவுலர்கள் நமக்கு வேண்டும். அப்பொழுதுதான் தைரியமாக நம் அணித்தேர்வாளர்கள் ஒரு நல்ல விக்கெட் கீப்பரைக் கொண்டு வரப்போகிறார்கள்.
       
    Ram
    8/5/2004 , 3:56:02 PM

     [Comment url]
    பத்ரி யெழுதிதுபோல் தினேஷ் கார்த்திக் டீமில் வந்தாச்சு.
       
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2004 Tamiloviam - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |