|
அரசியல் ஆதாயம்; கருதி, பின்விளைவுகள் பற்றிய சிந்தனை எதுவுமின்றி, பாராளுமன்றத்தை நிர்மூலமாக்க நினைத்த பயங்கரவாதிகளுக்குக் கருணை காட்ட எண்ணுவது – அதன் பாதுகாப்பில் உயிர்நீத்தவர்களைத் துச்சமாக மதிக்கும் துர்நிலைக்குச் சமமாகும்;.
வாக்குகளைச் சேர்ப்பதற்கு வாடிக்கையாய்ப் போன இவ்வழிகளை சம்பந்தப்பட்ட பிரிவினர் கூடச் சம்மதித்து ஏற்க மாட்டார்கள்.
மோசத்தைச் சுமக்கும் சுயலாபத்திற்காய் தேசத்தை அடகுவைக்க முடிவெடுப்பது தொடரும் வரை வெடிகுண்டுகள் நாளும் உயிர்பெறும். வேதனைகள் தினம் முளைவிடும்.
|