ஆகஸ்ட் 12 2004
தராசு
வேர்கள்
மேட்ச் பிக்சிங்
பருந்துப் பார்வை
முத்தொள்ளாயிரம்
நியுஜெர்சி ரவுண்டப்
க. கண்டுக்கொண்டேன்
கட்டுரை
காந்தீய விழுமியங்கள்
பேட்டி
3D கதைகள்
கவிதை
புதிய தொடர்
திரையோவியம்
கோடம்பாக்கம்
இசை உலா
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    கவிதை : அப்பியாசம்
    - வந்தியத்தேவன்
    | Printable version |

     

    ஏகதேசக் கும்பலின்
    விரை வீக்க விஷயத்தை
    தேசமேலேற்றும் த்வனி
    உபாதிக்கு ஔடதமுண்டு
    பிச்சி உச்சிக்கு சூரணமேது?

    சோபம் சேர்க்கத்தான்
    சென்றான் சோதரன்
    தக்கணியாய் பெற்றான்
    தண்டமில்லை தகநம்

    துராகிருதம் செய்து
    துட்டனாய் துரோகமும் செய்து
    துவி பாஷிதராய்
    துவைதம் பேசுகிறார்

    தௌகித்திரனின் பரிணயம்
    பாஷாணத்தை பாணிக்கிரகணம்
    செய்தவர் அறிவாரா?

    பரிசனமே
    பராமரிசம் செய்
    பரதேசம் பார்த்துத் தெளி
    பலிதமிது கடைசி

    பரிசுத்த நாமம் வேண்டிலன்
    பாண்டித்தியம் பயன்செய்ய
    பரஞானத்தை
    பரிகரித்தல் செய்கிலேன்

    மோக மித்திரம்
    மொத்த மந்திரமில்லை
    தந்திரமாய்
    யத்தனம் செய்யாதே

    முகஸ்துதி முத்தியல்ல
    மூட மதியாரே
    மௌட்டியமே வேதனை
    மௌலி களையுங்கள்

    வநாந்தர வானரங்கள்
    வர்த்தமானங்கள் தரும்
    வந்தித்தல் செய்ய இறைஞ்சும்
    நிந்தித்தால் விகடம் செய்யும்

    வாதப்பிரதிவாதம் செய்
    ஓதம் பேசும்
    வாக்கியார்த்தம் செய்
    வக்கிரலீலை செய்யும்

    விடசெந்தை விரும்பியோரே
    விடசுரமிதோ விசுவரூபமாய்
    வேணுகானம் வேண்டாம்
    அவலத்தில் அமலனும் உண்டு
    அந்தகாரம் அகற்று...

    புரியாவிடில்
    பூஸ்திதி பற்றை
    புன(ண)ர் விவாகம்
    செய்...

     

    உங்கள் கருத்து  
    வந்தியத்தேவன்
    8/13/2004 , 12:37:58 AM

     [Comment url]
    என்னாச்சுய்யா வந்தியத்தேவனுக்கு என்று மலைக்காதீர். பின்புலமென்னவெனில் இணையத்தில் இந்திய அமைதிப்டையை தரக்குறைவாக இலக்கிய சொல்லாடல்கள் நடக்கின்றன. அதற்கான எதிர்வினதான் இது.
       
    பாலாஜி
    8/13/2004 , 3:23:47 PM

     [Comment url]
    ஒரு சார்பை மட்டும், புரியாத மொழியில் இங்கு வெளியிட்டது வருந்த வைக்கிறது. குறைந்தபட்சம், எதற்காக இந்தக் 'கவிதை' எழுதப்பட்டது என்பதற்கான சுட்டிகளாவது கொடுக்கப் பட்டிருக்க வேண்டும் :-(
       
    வந்தியத்தேவன்
    8/13/2004 , 11:16:08 PM

     [Comment url]
    என்ன பாபா? இணையத்தையே ஒரு நாளைக்கு பலமுறை வலம் வரும் உமக்கா சுட்டிகள் தேவை? சரி கேட்டு விட்டீர்கள். வாசகருக்காக கொடுக்கின்றேன்:



    அப்புறம் புரியாத மொழி என்று சொல்லிவிட்டீர்கள். நன்றி. இன்று நான் இணைய இலக்கியவதியானேன்.

    ஆமாம் வியட்நாம் பற்றி எனது வலைப்பூவில் பின்னூட்டம் விட்டது நீங்கள்தானா?
       
    வந்தியத்தேவன்
    8/13/2004 , 11:48:36 PM

     [Comment url]
    சுட்டிகள் இங்கே எவ்வாறு கொடுப்பதென்று தெரியவில்லை. தமிழில் தப்பும் தவறுமாய் வருகின்றது. விருப்பமுள்ளவர் என் வலைப்பூவிற்கு வாருங்கள்.
       
    பாலாஜி
    8/14/2004 , 1:13:49 AM

     [Comment url]
    அது நான்தான்...
       
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2004 Tamiloviam - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |