|
ஏகதேசக் கும்பலின் விரை வீக்க விஷயத்தை தேசமேலேற்றும் த்வனி உபாதிக்கு ஔடதமுண்டு பிச்சி உச்சிக்கு சூரணமேது?
சோபம் சேர்க்கத்தான் சென்றான் சோதரன் தக்கணியாய் பெற்றான் தண்டமில்லை தகநம்
துராகிருதம் செய்து துட்டனாய் துரோகமும் செய்து துவி பாஷிதராய் துவைதம் பேசுகிறார்
தௌகித்திரனின் பரிணயம் பாஷாணத்தை பாணிக்கிரகணம் செய்தவர் அறிவாரா?
பரிசனமே பராமரிசம் செய் பரதேசம் பார்த்துத் தெளி பலிதமிது கடைசி
பரிசுத்த நாமம் வேண்டிலன் பாண்டித்தியம் பயன்செய்ய பரஞானத்தை பரிகரித்தல் செய்கிலேன்
மோக மித்திரம் மொத்த மந்திரமில்லை தந்திரமாய் யத்தனம் செய்யாதே
முகஸ்துதி முத்தியல்ல மூட மதியாரே மௌட்டியமே வேதனை மௌலி களையுங்கள்
வநாந்தர வானரங்கள் வர்த்தமானங்கள் தரும் வந்தித்தல் செய்ய இறைஞ்சும் நிந்தித்தால் விகடம் செய்யும்
வாதப்பிரதிவாதம் செய் ஓதம் பேசும் வாக்கியார்த்தம் செய் வக்கிரலீலை செய்யும்
விடசெந்தை விரும்பியோரே விடசுரமிதோ விசுவரூபமாய் வேணுகானம் வேண்டாம் அவலத்தில் அமலனும் உண்டு அந்தகாரம் அகற்று...
புரியாவிடில் பூஸ்திதி பற்றை புன(ண)ர் விவாகம் செய்...
|