| சென்ற இதழ்கள் |
|
|
|
|
|
அறிவிப்பு : அமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும் |
|
- [feedback@tamiloviam.com]
|
|
|
|
வரும் வாரம் முதல் " நல்லடியார்" எழுதும் புதிய தொடர் "அமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்"
- ஆர்.
முன்னுரை - " நல்லடியார்"
சாந்தியும் சமாதானமும் படைத்தவன் புறத்திலிருந்து உண்டாகட்டுமாக.
இஸ்லாம் என்பது இன்றைக்கு உலகு புரிந்து வைத்திருப்பது போன்றதொரு மதமல்ல. அது ஒரு வாழ்க்கை நெறி. இஸ்லாத்தின் நோக்கம், மனிதர்கள் அமைதியாக வாழ வேண்டும் என்பதேயாகும்.
மாற்றுமத சகோதரர்கள் நினைப்பது போல இஸ்லாம் ஒரு மதமாக இருந்திருக்குமானால், அது வணக்க வழிபாட்டு முறைகளைப் பற்றித் தான் தன் திருமறையின் வாயிலாகப் போதித்திருக்கும். ஆனால் அந்தத் திருமறையின் ஆரம்ப வசனங்கள் கூறுவது என்னவென்றால்,
இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்;. இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப் பெற்ற (வேதத்)தின் மீதும்; உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை (மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (இரண்டாவது அத்தியாயம் - வசன எண்கள் 2-5)
உலக சமயங்களில் இஸ்லாமிய வாழ்க்கை நெறி மட்டுமே அதிகப்படியான கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது. இஸ்லாத்தின் மீது சேற்றை அள்ளிப் பூசிக் கொண்டிருப்போர் நியாயமான விமர்சனங்களை மேற்கொள்வதில்லை. தங்களின் மூடத்தனமும் குற்றங்களும் இஸ்லாத்திற்கு எதிராக இருப்பதால் நியாய உணர்வுகளை அவர்களால் மதிக்க முடிவதில்லை. இஸ்லாமியக் கோட்பாடுகளும் கட்டுப்பபாடுகளும் மனித இனத்திற்கு வலம் சேர்ப்பதை இவர்கள் சரியாகப் புரிந்து கொள்வதில்லை அல்லது புரியாதது போன்று நடிக்கிறார்கள்.
இஸ்லாமிய சமயத்தை விமர்சிக்கும் உரிமை இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலம் முதல் இன்று வரை அனைவருக்கும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த விமர்சனங்கள் நியாயமானதாக இருக்கவேண்டும். உண்மை உணர்த்தப்படும் போது ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நிறைந்ததாக இருக்கவேண்டும். இதுதான் அறிவுடமை.
முதலில் இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் இன்றைய முஸ்லிம்களின் செயல்களிலிருந்து தொடங்குவார்கள். பர்தா, பெண்ணுரிமை, பலதாரமணம் எனத் தொடங்கி குண்டுவெடிப்பு, தீவிரவாதம், பின்லாடன் etc என இவர்களின் விமரிசனம் திசைமாரிச் செல்லும்.
இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இப்படித்தான் குறை சொல்ல முடியும். மிகச் சமார்த்தியமாக தங்கள் புழுத்துப் போன கொள்கைகளையும் மூட நம்பிக்கைகளையும் மறைத்து விட்டு, இஸ்லாத்திற்கு பகரமாக அறிவியலையோ அல்லது மேற்கத்திய கலாச்சாரத்தையோ சொல்வார்கள். இதுவா விமரிசனம்?. ஒரு ஆப்பிளை இன்னொரு ஆப்பிளோடுதானே ஒப்பிட வேண்டும்? அதுதானே நியாயமும் நடுநிலையுமாகும்.
அந்த வகையில்தான் திரு.நேசகுமார், சமீபத்தில் மொழிபெயர்த்த டாக்டர். கொய்ன்ராட் எல்ஸ்ட் என்பவரின் "வஹீ- ஒரு அமானுடப் பார்வை" என்ற கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. மொழிபெயர்ப்பாளரும் ஏதோ சமூக பொறுப்பிலும், உலகளாவிய சகோதரத்துவத்தை நிலை நாட்டுவதிலும் ஆர்வமுள்ளவர் அல்லர். தனிப்பட்ட முறையில் முஸ்லிம்களின் செயல்கள் அவரின் வாழ்க்கையில் எதிர்மறை பாதிப்பை ஏற்படுத்தியதால், அவரின் இஸ்லாமிய எதிர்ப்புவாதத்தை நியாயப்படுத்தி இருந்ததையும், எழுத்தாளர் திரு. யமுனா ராஜேந்திரன் மற்றும் பி.கே. சிவகுமார் இவரின் இஸ்லாமிய எதிர்ப்புவாத அணுகுமுறையை விமரிசித்திருந்ததையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
சிந்தனைக்கும், அறிவிற்கும் உரமிடும் கருத்துக்கள் எதுவும் அதில் இல்லையென்றாலும், ஏதோ உலகப் பிரச்சனைக்களுக்கெல்லாம் இஸ்லாம் / திருக்குர்ஆன் தான் காரணம் என்பது போலவும், இஸ்லாம் தான் வன்முறைகள் எல்லாவற்றிற்கும் வித்திட்டது போலவும் எழுதியிருந்தார்.
கட்டுரையின் முழு பரிமாணமே நபிகள் நாயகத்திற்கு வந்த "வஹி" எனும் இறைச் செய்தியையும் அதன் நம்பகத்தன்மையையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளதால் இதற்கான விளக்கம் எழுத வேண்டியது அவசியமாகிறது.
இதுவரை எவருமே இஸ்லாத்தின் அடிப்படையை ஆராயாதது போலவும் இந்தியாவில் இருந்த ஒரு சில இந்துமத அறிஞர்கள் மட்டும் இதில் கவனம் செலுத்தி அதிலிருந்த முரண்பாடுகளை கண்டுபிடித்தாகவும் அதில் குறிப்பிடத்தக்கவர்களாக சுவாமி தயானந்த சரஸ்வதி, விவேகானந்தர் போன்றவர்களின் பெயர்களில் சில கருத்துக்களை எழுதியிருந்தார். (இவர்களின் பின்னணி "இந்துத்துவா மீட்சி" என்பதும், அதற்கு தடைக்கல்லாக இஸ்லாம் இருப்பதும் வேறு விஷயம்)
அது மட்டுமின்றி சரியான பயிற்சி இல்லாததால், அதாவது ஒரு யோகிக்குரிய பயிற்சி எதுவும் நபிகள் நாயகத்திற்கு இல்லாததால் அவருக்குத் தோன்றிய ஒரு சில நல்ல கருத்துக்களுக்கு இடையே தனது சொந்தக் கருத்துக்களையும் திணித்து தன்னை முன்னிலைப் படுத்தினார் என்ற குற்றச்சாட்டையும் வைத்துள்ளார்.
மனிதர்களின் எதார்த்த குணம், நியாயமான எவ்வித புதிய கருத்துக்களையும் உடனடியாக ஏற்றுக் கொள்வதில்லை. இந்த நிலை ஏன் என்று ஆராய்ச்சி செய்த மனோவியல் ஆராய்ச்சியாளர்கள் "மனிதனின் வாழ்வியல் பய உணர்ச்சிகளின் காரணாமாகவே இவ்வாறு நிகழ்கிறது" என்று கணிக்கின்றனர். இந்த மனப்பான்மையை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். SUSPICION என்னும் சந்தேக நோக்கு SKEPTICISM என்னும் சமயக் கொள்கைகளின் மீதான அவநம்பிக்கை.
வஹீ-பற்றிய மொழிபெயர்ப்புப் பதிவில் Dr.Koenraad Elst / நேசகுமார் போன்றவர்களுக்கு வந்திருக்கும் சந்தேகம் இரண்டாவது வகையே. இஸ்லாத்திற்கு எதிரான சந்தேகம் அது அறிமுகப்படுத்தப் பட்டதிலிருந்தே தொடர்கிறது. நபிகளாரின் தோழர்களாக பின்னாளில் மாறியவர்கள், இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் - இஸ்லாமிய ஏகத்துவக் கொள்கையை சந்தேகப் பட்டதோடு அதனை ஒழிக்கவும் கங்கணம் கட்டியவர்கள் என்பதை வரலாற்றின் மூலம் அறியலாம்.
நபிகளாரின் காலகட்டத்தில் இருந்த இஸ்லாத்தின் எதிரிகள் பல்வேறு வகையான இட்டுக் கட்டல்கள் மூலம் முஹம்மது நபியின் தூதுத்துவத்தை சந்தேகத்திற்கு உட்படுத்திட முனைந்தனர். முஹம்மது நபியின் நம்பகத்தன்மையை குறை சொல்ல அவர்களால் முடியவில்லை. ஏனெனில் இஸ்லாத்தை சொல்லும் முன்னரே முஹம்மது நபிகள் அக்கால மக்களிடையே நற்பெயர் பெற்றிருந்தார்கள்.
இஸ்லாத்தையும் அதன் புரட்சிக் கொள்கைகளையும் எந்த அறிவுப்பூர்வமான காரணம் கொண்டும் மறுக்க இயலாதவர்களுக்கு இருந்த ஒரே வழி, முஹம்மது நபியின் சொந்த வாழ்க்கை வரலாற்றை திரித்து அவர் கொண்டு வந்த வாழ்வியல் நெறியான இஸ்லாத்தை ஏனைய மேற்கத்தியக் கொள்கைகள் போல் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல என்ற நிலைக்கு கொண்டுவர விடுபட்ட காரணங்களை தேடிப்பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதற்கு மேற்கத்திய பின்னனி கொண்ட காவிச் சிந்தனையாளர்களின் உதவி தேவைப்பட்டது.
சில விளக்கங்கள்:
1) இத்தொடரில் இஸ்லாம் அல்லாத பிற மதங்களைப் பற்றிய எனது கண்ணோட்டம், இதுவரை நான் பார்த்த, பழகிய இன்றும் இனியும் நண்பர்களாக இருக்கும் சக இந்துக்களின் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் மற்றும் சில குறிப்புகளை வைத்து எழுதியுள்ளேன்.
2) முடிந்தவரை அநாகரிகமான விமரிசனங்களை தவிர்த்துள்ளேன். சொல்லப்பட்ட கருத்துக்களின் அழுத்தம் சம்பந்தப்பட்ட மதத்தவரை புண்படுத்தவோ அல்லது இதர மதங்களின் குறையைச் சொல்லி சில இஸ்லாமியரின் தவறுகளை நியாயப் படுத்தவது என் நோக்கம் அல்ல. பேய், பூதம் போன்ற நம்பிக்கைகளுக்கு துளியும் இடம் இல்லாத இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்த, மொழிபெயர்ப்பாளர் அவரின் தொடரில் வானவர் ஜப்ரீல் அவர்களை பூதம் போன்று படம் போட்டிருந்தார். அதற்கு பகரமாக நானும் இந்துக்கள் வணங்கும் லிங்கம் யோனி போன்றவற்றை இட்டு அவர்களின் மனதை புண்படுத்தினால் அவருக்கும் எனக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடும் என்பதால் அதனை தவிர்த்துள்ளேன்.
3) முஹம்மது நபிகளைப் பற்றி நற்கருத்து கொண்ட மாற்றுமத மற்றும் மதம் சாராத அறிஞர்களின் விமரிசனத்தையும் தவிர்த்துள்ளதன் மூலம், இக்கட்டுரையின் நோக்கம், வஹீ பற்றியும் முஹம்மது நபி பற்றியும், முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்ட அவதூறுகளுக்கான விளக்கமாகவுமே இத்தொடர் முன்வைக்கப் படுகிறது.
4) இஸ்லாத்தின் மீதான இது போன்ற ஆராய்ச்சிகளும், சிந்தனைத்தாக்குதல்களின் பின்னணியும் என்ன என்பதை இறுதியாக பார்ப்போம்.
5) என்னுடைய வேலைப்பளுவிற்கு இடையே எழுதப்பட்ட சொற்ப விளக்கமே தவிர அவரின் கட்டுரைக்கு முழுமையான விளக்கமாக கருத வேண்டாம். இதனை நான்கு தொடரில் முடித்துவிட எண்ணியுள்ளேன். தேவைப்பட்டால் பிரிதொரு சந்தர்ப்பத்தில் வாய்ப்பு கிடைக்கும்பொழுது விரிவாக பார்ப்போம். இவரின் முந்தைய குற்றச்சாட்டுகளுக்கு http://abumuhai.blogspot.com, http://islamicreply.blogspot.com, http://athusari.blogspot.com, http://islamanswers.blogspot.com போன்ற பதிவுகளில் விளக்கம் தரப்பட்டுள்ளது என்பதையும் தமிழோவியம் வாசகர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
|
|
|
உங்கள் கருத்து  |
சலாஹுத்தீன்
9/12/2005 , 2:17:46 AM
[Comment
url]
|
//ஒரு ஆப்பிளை இன்னொரு ஆப்பிளோடுதானே ஒப்பிட வேண்டும்? அதுதானே நியாயமும் நடுநிலையுமாகும். //
உங்கள் முன்னுரை தெளிவாக இருக்கிறது. தொடரும் உங்கள் கட்டுரையில் மேலும் தெளிவான கருத்துக்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்!
- சலாஹுத்தீன் |
| |
|
அப்துல் கரீம்
9/12/2005 , 4:17:21 AM
[Comment
url]
|
அருமையான முன்னுரை. முழு தொடரையும் எதிர்பார்த்திருக்கிறேன். |
| |
|
Contivity
9/12/2005 , 8:29:27 AM
[Comment
url]
|
அருமையான முன்னுரை கொடுத்துள்ளீர்கள். திரு. நேசகுமாரின் கட்டுரைக்கு இம்மாதிரி மறுப்புக் கருத்தையும் தொடராக வெளியிட அனுமதித்து தமிழோவியம் குழுவினர் தங்களின் நடுநிலைமையை நிறுவியுள்ளது மிகவும் பாராட்டத் தக்கது.. |
| |
|
Aboo Shakir
9/12/2005 , 4:58:40 PM
[Comment
url]
|
நல்லடியார் அவர்களே, நன்றி. நேச குமாரின் அற்பமான சிந்தனைக்கும், துவேஷம் மற்றும் வஞ்சனை மிகுந்த கட்டுரைக்கும் மறுப்பு எழுத விரும்பினேன். ஆனால், என்னுடைய எழுத்துலக அனுபவமின்மையோ அல்லது தமிழோவிய உள் விவகாரமோ தெரியவில்லை; எனது முன்னுரை கூட பிரசுரிக்கப் படவில்லை. தமிழோவியம் ஒரு முஸ்லிமின் மறுப்புரையை அனுமதிக்க வில்லையோ என்று நினைத்தேன். தங்களின் இந்த கட்டுரை மூலம் தமிழோவியம் நடு நிலையோடு தான் நடந்துக்க் கொள்கிறது என்பது புரிகிறது. நேசகுமாரின் அற்பக் கட்டுரை நடு நலையான மாற்று மதத்தினருக்கு ஒரு விளக்கமாக அமைய வேண்டுமென்பதே நமது எதிர்பார்ப்பு. இறைவன் தங்கள் முயற்ச்சியை வெற்றியடையச் செய்ய பிரார்த்திக்கிறேன்.
அன்புடன், அபூ ஷாகிர்.
|
| |
|
Athi. Azahu
9/13/2005 , 1:15:35 AM
[Comment
url]
|
தெளிந்த சிந்தனை; நல்ல தமிழ் நடை; நளினமான அணுகுமுறை. கடின உழைப்பு, சிறந்த படைப்பு, அய்யமில்லை - அதி. அழகு. |
| |
|
நேச குமார்
9/13/2005 , 1:35:19 AM
[Comment
url]
|
அன்பின் நல்லடியார்,
தாங்கள் மறுப்பு எழுத முன்வந்திருப்பது நல்ல ஆரோக்கியமான அணுகுமுறை, வரவேற்கிறேன். எழுதும்போது தனிப்பட்ட முறையில் என்னைக் குறிப்பிட்டு எழுதாமல், கருத்துக்களை மறுத்து எழுதினால் நன்று. தனிப்பட்ட முறையில் என்னைக் குறித்து எழுதினால், அது உங்களது கட்டுரைகளின் குவியத்தை புறந்தள்ளிவிடும். உதாரணமாக மேலே கண்ட உங்களது முன்னுரையில் இப்படிக் குறிப்பிட்டுள்ளீர்கள்:
--- "மொழிபெயர்ப்பாளரும் ஏதோ சமூக பொறுப்பிலும், உலகளாவிய சகோதரத்துவத்தை நிலை நாட்டுவதிலும் ஆர்வமுள்ளவர் அல்லர். தனிப்பட்ட முறையில் முஸ்லிம்களின் செயல்கள் அவரின் வாழ்க்கையில் எதிர்மறை பாதிப்பை ஏற்படுத்தியதால், அவரின் இஸ்லாமிய எதிர்ப்புவாதத்தை நியாயப்படுத்தி இருந்ததையும், " ---
நான் தனிப்பட்ட முறையில் எங்கே எப்படி பாதிக்கப் பட்டேன் ஐயா? எப்படி இந்த முடிவுக்கு வந்தீர்கள்? இணைய எழுத்தாளரும், நன்பருமான திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமது பதிவில் பிரசுரித்திருந்த எனது பேட்டியிலிருந்து இத்தகைய முடிவுக்கு வந்திருந்தீர்கள் என்றால், பேட்டியின் அப்பகுதியை மீன்டும் ஒரு முறை படித்துப் பாருஙள்:
--- "கே: பல சமயங்களில் உங்களிடம் பேசும்போது நான் வியந்து போவது இதுதான் - எப்படி உங்களுக்கு இந்த அளவுக்கு இஸ்லாம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது. வாழ்க்கையில் எந்த நிலையிலாவது இஸ்லாத்தால் நேரடியாக பாதிக்கப் பட்டிருக்கின்றீர்களா?
ப: ஆம். நான் நேரடியாக பாதிக்கப் பட்டிருக்கின்றேன், பாதிக்கப் பட்டுக் கொண்டுள்ளேன். நான் மட்டுமல்ல, நாம் அனைவருமே இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் தொடர்ந்து பாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறோம். காஷ்மீருக்கு செலவிட்ட தொகை இது வரை இன்றைய விலையில் இரண்டு லட்சம் கோடிகளுக்கு மேல் இருக்கும். பாகிஸ்தானுடனான போர்களில் செலவான தொகை இதைவிட இன்னும் அதிகம் இருக்கும். பொருளாதார ரீதியாக நம்மை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது இஸ்லாமிய அடிப்படைவாதம். நாடு முழுவதும் எங்கெங்கெல்லாம் பொருளாதார மேம்பாடு இருக்கின்றதோ - மும்பாய், கோயம்புத்தூர், சூரத் என்று அங்கெல்லாம் எதாவது ஒரு காரணத்தைக் காட்டி இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்குதல் தொடுத்து நமது பொருளாதார முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முயன்று வருகின்றனர். மும்பாய் குண்டு வெடிப்புகளையும், கோவை குண்டு வெடிப்புகளையும் பாருங்களேன் - இரண்டிற்குமிடையேயான ஒற்றுமைகள், உபயோகப் படுத்தப்பட்ட குண்டுகளிலிருந்து, ஈடுபட்ட அமைப்புகளுக்கிடையேயான தொடர்புகளிலிருந்து , இந்த ஒற்றுமை விளங்கும். இப்போது பெங்களூரில் தாக்குதல் நடத்தப் போவதாக லஷ்கர்-இ-தொய்பா அறிவித்துள்ளது...."
முழு நேர்காணலையும் இங்கே காணலாம்:
க்ட்ட்ப்://கிசு.cய்பெர்ப்ரக்ம.cஒம்/?ப்=61
அதில் நான் குறிப்பிட்டிருந்தது, நாம் அனைவரும் (இஸ்லாமியரான நீங்கள் உட்பட) தனிப்பட்ட முறையில் இஸ்லாமிய தீவிரவாதத்தால் பாதிக்கப் பட்டுக் கொண்டுள்ளோம் என்பதை. அதற்கு உதாரணமாக, இந்திய சமூகம் பொருளாதார ரீதியாக இஸ்லாமிய தீவிரவாதத்தால் பாதிக்கப் பட்டுக்கொண்டிருப்பதை சுட்டிக்காட்டியிருந்தேன். இந்திய சிந்தனையாளர்கள் மட்டுமல்ல, இன்றைய பாகிஸ்தானிய சிந்தனையாளர்களும் - ஏன் சவுதி அதிகாரவர்க்கம் கூட ஒப்புக் கொள்ளும் ஒரு விஷயம் அது - அதாவது இஸ்லாமிய தீவிரவாதம் ஒரு சமூகத்தை மெள்ள மெள்ள பொருளாதார, உளவியல் ரீதியாக உருக்குலைத்து சுடுகாடாக மாற்றிவிடும் என்பது. பாகிஸ்தானிய அதிகார-வியாபார வர்க்கம் இதை வெளிப்படையாக இன்று ஒப்புக் கொண்டுள்ளது. இதையே நான் எனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தேன்.
அதுபோன்றே, யமுனா ராஜேந்திரன் மற்றும் பி.கே.சிவகுமார் குறித்து நீங்கள் குறிப்பிட்டிருந்தது. இந்த இருவரும், இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தங்களளவில் நிறைய விமர்சித்துள்ளார்கள். எனது சில கருத்துக்களை அவர்கள் விமர்சித்திருந்தார்கள் என்பது உண்மைதான். ஆனால், இப்படிப்பட்ட விமர்சனங்கள் இணையத்தில், தமிழிலக்கிய உலகில் சாதாரணமாக நடைபெறும் ஒன்று. நீங்கள் குறிப்பிடும் அதே யமுனா ராஜேந்திரன் எனது அணுகுமுறை நாகரிகமாக இருக்கின்றது என்று பாராட்டியிருந்ததையும், பி.கே.சிவகுமாருக்கு நான் விரிவான விளக்கத்தை மரத்தடியில் அளித்திருந்ததையும் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். யமுனா ராஜேந்திரனின் கட்டுரையின் மையப்பகுதி நான் ஜெயமோகன் என்றிருந்தது. அதற்கு நான் பதிலளித்த பின்பு அவர் அக்குற்றச்சாட்டை தொடரவில்லை என்பதால் நான் யமுனாவின் இரண்டாவது கட்டுரைக்கு பதிலளிக்கவில்லை. இவற்றையெல்லாம் ஏன் இங்கே குறிப்பிட்டுள்ளீர்கள் என்பதெல்லாம் எனக்கு விளங்கவில்லை.
மற்றபடி, உங்களது முன்னுரையில் பலவிஷயங்கள் குறித்து எழுதவேண்டும் என்று தோன்றினாலும், உங்களைப் போன்றவர்கள் இப்படியெல்லாம் எழுத வந்திருப்பதே பெரிய மாறுதல் என்று தோன்றுவதாலும், வரிக்கு வரி மறுத்து எழுதுவது நாகரிகமாக இருக்காது என்பதாலும், நேரமின்மையினாலும் இப்போதைக்கு இத்துடன் முடித்துக் கொள்கிறேன்(கிட்டத்தட்ட இதே காரணத்தினால்தான் அபுமுஹை மற்றும் நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள ஏனையோரின் பதிவுகளுக்கும் நான் உடனுக்குடன் மறுப்பு எழுதுவதில்லை).
உங்களது கட்டுரைகளை ஆவலுடன் எதிர்னோக்கியபடி,
நேச குமார்
|
| |
|
நேச குமார்
9/13/2005 , 1:42:45 AM
[Comment
url]
|
மேலே, இணைப்பு சரியாக வரவில்லை. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பதிவில் வந்திருந்த எனது நேர்காணலின் சுட்டி:
http://kichu.cyberbrahma.com/?p=61 |
| |
|
karuppasaamy
9/13/2005 , 2:23:16 AM
[Comment
url]
|
தமிழ் மொழி என்றுமே அறிவின் வழி நிற்பது. அது மதம் சார்ந்ததன்று. எல்லா மதங்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் தோன்றிய படைப்புகளையும் தன்னகத்தே கொண்டு அழகியலின் வழி செல்வது. ஆயின் உஙகள் உரையாடல்களின் தொடர்ச்சி நகைப்புக்குரியதாய் அமைந்துள்ளது. மீண்டும் மீண்டும் பழமை வாதத்தில் மூழ்குவதும் பகைமை பாராட்டுவதும் சிறப்பன்று. |
| |
|
நல்லடியார்
9/13/2005 , 2:36:52 AM
[Comment
url]
|
சகோ.நேசகுமார்,
உங்களை தனிப்பட்ட முறையில் விமரிசித்து உங்கள் கருத்தை விமரிசிப்பது என்பது என் நோக்கமல்ல.நீங்கள் எதிர்ப்பது அனைத்துவகை தீவிரவாதங்களும் என்றால் உங்களோடு இணைந்து எதிர்ப்பதில் ஆட்சேபனை இல்லை. மாறாக இஸ்லாம்தான் எல்லா தீவிரவாதத்திற்கும் காரணம் போல் உங்கள் கட்டுரையின் சாராம்சமாக இருக்கும் போதும், இதர தீவிரவாதங்களை நீங்கள் எதிர்க்காத போதும் உங்கள் நடு நிலைமை சந்தேகத்திற்குறியதாகிறது.
அன்புடன், நல்லடியார் |
| |
|
ibnu basheer
9/13/2005 , 4:14:31 AM
[Comment
url]
|
நேசகுமார்,
நல்லடியார் குறிப்பிட்டதில் தவறு எதுவும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.
சில இந்துமத துறவிகளைப்பற்றி அசிங்கமான தகவல்கள் வெளியான போது, அது சில தனிநபர்களின் குற்றம், அதற்காக ஒட்டுமொத்த துறவறத்தையும் குறை சொல்லாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்த நீங்கள், சில தனிநபர்களின் தீவிரவாத செயல்களுக்காக ஒட்டு மொத்த இஸ்லாத்தையும் குறை கூற தயங்கவில்லை. மேலும் ஆதாரமற்ற அவதூறுகளை முன்னிறுத்தி நபிகளாரை கேவலமாக சித்தரிக்கவும் நீங்கள் தயங்கியதில்லை.
//அல்லாஹ் என்ற அரபி கருப்பண்ண சாமியைப் பற்றி, ஜிப்ரீல் என்ற (விண்ணுக்கும் மண்ணுக்குமாய் முதலில் தெரிந்து, அது ஒரு தீய ஆவி என்று நபிகளார் முதலில் சந்தேகித்த) பூதத்தைப் பற்றிய எவ்வித ஆய்வாவது முஸ்லிம்களிடையே நிகழ்ந்திருக்கின்றதா?//
இதுவும் நீங்கள் எழுதியதுதான். நினைவிருக்கிறதா?
இந்த அளவிற்கு உங்களுக்கு இஸ்லாத்தின் மீது வெறுப்பு வர காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிப்பவர்களுக்கு இயல்பாக தோன்றக்கூடிய கேள்விதான் இது: //வாழ்க்கையில் எந்த நிலையிலாவது இஸ்லாத்தால் நேரடியாக பாதிக்கப் பட்டிருக்கின்றீர்களா?//
அதற்கு உங்கள் பதில்: //ஆம். நான் நேரடியாக பாதிக்கப் பட்டிருக்கின்றேன், பாதிக்கப் பட்டுக் கொண்டுள்ளேன். நான் மட்டுமல்ல, நாம் அனைவருமே இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் தொடர்ந்து பாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறோம்//
நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா என்று கேட்கப்பட்டதற்கு, ஆம் நான் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கின்றேன் என்று தெளிவாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள். மாறாக ஒட்டு மொத்த சமூகத்தின் மீதான பாதிப்பு என்பதாக நீங்கள் குறிப்பிட விரும்பியிருந்தால், அது மறைமுகமான பாதிப்பாகத்தான் இருந்திருக்குமே ஒழிய 'நேரடியான' என்ற வார்த்தைப்பிரயோகத்திற்கே இங்கு தேவையிருந்திருக்காது.
தவிர, 'எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும்..' என்ற குறள் எல்லா நேரங்களிலும் பொருந்தாது. குறிப்பாக இஸ்லாம் பற்றிய விவாதங்களில், சொல்பவர்களின் பிண்ணனியைக் கொண்டுதான் அவர்கள் வெளியிடும் கருத்துக்கள் மதிக்கப்பட வேண்டும். இந்த நோக்கில், தொடர்ந்து இஸ்லாத்தை தாக்கி எழுதிவரும் உங்கள் பிண்ணனியை, உங்கள் வார்த்தைகளைக் கொண்டே தகுந்த இடத்தில் அறிமுகப்படுத்தி வைத்த நல்லடியாரை பாராட்டுகிறேன்.
|
| |
|
NetFan
9/13/2005 , 4:30:21 AM
[Comment
url]
|
//எழுத்தாளர் திரு. யமுனா ராஜேந்திரன் மற்றும் பி.கே. சிவகுமார் இவரின் இஸ்லாமிய எதிர்ப்புவாத அணுகுமுறையை விமரிசித்திருந்ததையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.//
நல்லடியார்,
உங்களின் மறுப்பும் விளக்கமும் அவசியமான ஒன்று.
யமுனா ராஜேந்திரனும் பி.கே. சிவகுமாரும் சொன்ன விஷயங்களின் சாரம்சம் என்னவென்பதைப்பற்றிய திசை திருப்பல் இங்கு நடக்காமல் இருக்க அவர்களின் முக்கிய கருத்துகளை இங்கே பதிவது பொருத்தமாக இருக்கும். அவர்களின் கட்டுரையை முழுவதுமாக படிக்க வசதியாக இணைய முகவரியையும் இணைத்துள்ளேன். இவைகளை படித்துவிட்டு மொழிபெயர்ப்பாளர் தந்த விளக்கத்தையும் படித்துவிட்டு அவர் அடைந்த பாதிப்பு என்னவென்பதையும் அவரவரே யூகித்துக்கொள்ள விட்டுவிடுகிறேன்.
அன்புடன் இணைய விசிறி
//யமுனா ராஜேந்திரன் http://www.geotamil.com/pathivukal/yamunaonjeyamogan_a.html
ஸைபர் வெளி பற்பலருக்கு ஒளிந்து விள¨யாடும் இடமாகவும் தத்தமது போக்கிரித்தனங்களைக் கொட்டும் இடமாகவும் இருக்கிறது என்பதனை தமிழ் ஸைபர் வெளியிணை நுண்தளத்தில் அனுமானித்து வந்திருப்பவர்கள் அவதானிக்க முடியும். சோவியத மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் ஸமீட்சாட் வகை முகத்திரைகளோடு தமிழ்ச்சூழலில் பலர் ஸைபர் வெளியில் நடமாடி வருகிறார்கள்.
தமது அடையாளங்களை புனைபெயரிலும் போலி மின்னஞ்சல் முகவரியிலும் பரிபாலித்துவரும் இவர்கள் தமக்கு எதிர்வினை புரிபவர்களை துட்பமான வகையில் பெயர் குறிப்பிட்டு விவாதங்களை நிகழ்த்தி வருகிறார்கள்.
ஸைபர் வெளி நிழல் மனிதர்களை அணுகுவதில் நேரடியாக விவாதத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு மிகுந்த சிக்கல்கள் இருக்கிறது.
முதலாவதாக இவர்கள் தமது அடையாளங்களை முற்றிலுமாக மறைத்துக் கொள்கிறார்கள். இவர்கள் முன்வைக்கும் விவாதங்கள் ஆழந்த நுண்அரசியல் சார்ந்ததாக இருக்கிறது. இவர்களுக்கு எதிர்விணை செய்பவரின் குறிப்பான சாதிய,மத,பால்,இன,கருத்தியல் அடையாளங்களை முன்னிறுத்தி விவாதங்களைச் மேற்கொள்கிற இவர்கள் தமது அடையாளத்தை முற்றிலும்; மறைத்துக் கொள்கிற நிலையில் எதிர்வினையாற்றுபவர் ஒரு கட்டத்திற்கு மேல் இத்தகைய நிழல மனிதர்களோடு தொடர்ந்து உடையாடுவது என்பது சாத்தியமில்லாமல் போகிறது.
இரண்டாவதாக இத்தகைய நிழல் மனிதர்கள் முன்வைக்கும் விவாதங்களை ஆதரித்து எழதுகிறவர்களும் நிழல் மனிதர்களாக இருக்கும் போது எதிர்வினையாற்றுபவரின் நிலைமை இன்னும் சிக்கலாகிறது. ஒரே பிரச்சினையை முன்வைக்கிற நிழல் மனிதனும், அதனைச் சார்ந்தும் ஆதரித்தும், ஒரு கட்டத்தில் அவதூற்று மொழியைப் பிரயோகிப்பவரும் ஒரே நிழல் மனிதரின் பல்வேறு நடமாடும் நிழல்களா எனும் சந்தேகமும் நியாயமாகவே தோன்றுகிறது. ஆதாரமான நிழல்மனிதனும் ஆதரித்து எழுதும் நிழல் மனிதர்களும் சஞ்சரிக்கும் சிந்தனைத் தளம் ஒன்றே என ஆகுமானால் ஆதாரமான நிழல் மனிதனின் பின்னிருக்கும் நிஜமனிதன் ஓரு புதைந்த திட்டத்தினடிப்ப¨யில் செயல்படும் மனிதன் என்றே கொள்ள வேண்டியிருக்கிறது.
இவ்வாறான நிழல் மனிதர்களைக் கண்டடைவதற்கு சில சூசங்கங்ளதை தொடர்ந்து சென்றே தேட வேண்டியிருக்கிறது. எதற்காக இந்தத் துப்பறிகிற வேலை என்கிற சோர்வு கூடச் சில வேளைகளில் தோன்;றுகிறது. இரண்டு காரணங்களுக்காக இந்தக் காரியத்தைச் செய்யத் வேண்டியிருக்கிறது. முதலாவதாக இவர்கள் எதிர்விணையாற்றுபவர்களை மறைந்த நின்றுகொண்டு கபடமான மொழியில் அவதூறு செய்கிறார்கள். இரண்டாவதாக இவர்களது மறைந்த நிலையிலான சமூகக் கலாச்சாரத் திட்டங்கள் மனித உடல்கள் மரணமுற்றுச் சரிகிற வெறிச்செயல்களுக்கான கருத்தியல் அடிப்படைகளை வழங்குவதாக இருக்கிறது. //
----
//பி.கே. சிவகுமார் http://pksivakumar.blogspot.com/2004/12/blog-post_17.html
4. பிராமணர்களை விமர்சிப்பதன் மூலமும், பிராமணர்களை ஒழித்துக் கட்டுவதன் மூலமும் சமூக மாற்றம் வந்துவிடும் என்று பெரியார் நினைத்தது எவ்வளவு சரியில்லையோ, அவ்வளவு சரியில்லை, முஸ்லீம்களை விமர்சிப்பதன் மூலமும், பயங்கரவாதத்தை நம்புகிற இஸ்லாமியர்கள் சிலரை மேற்கோள்களில் காட்டிப் பேசுவதன் மூலமும், பயங்கரவாதத்தை ஒழித்துவிடலாம் என்பதும். பயங்கரவாதம் என்ற நோய் தான் பற்றிப் படர பல்வேறு வழிகளைக் கையாளும். சில நேரங்களில் அது மதம் என்ற பெயரில் வரும். சில நேரங்களில் அது விடுதலை என்ற பெயரில் வரும். சில நேரங்களில் அது மொழிப்பற்று, நாட்டுப் பற்று என்ற பெயர்களில் கூட வரும். அந்த மாதிரி நேரங்களில் பயங்கரவாதம் எந்தக் காரணத்தைப் பயன்படுத்துகிறதோ, அந்தக் காரணத்தைப் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவிப்பதுதான் பயங்கரவாதத்தைத் தோற்கடிக்கிற வியூகமாக இருக்க முடியும். ஆனால், இந்துத்துவா நண்பர்கள் அதற்கு மாறாக இஸ்லாம் என்றாலே பயங்கரவாதம் என்ற பிரசாரத்தை மிகவும் சாமர்த்தியமாகவும் புத்திசாலித்தனமாகவும் செய்து வருகிறார்கள். இது பயங்கரவாதத்தை முறியடிக்க உதவாது. மாறாக, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையுடையவர்களை இன்னமும் அந்நியப்படுத்தவே இது உதவும். -- 7. சமூகத்தில் வாழ்கிற மக்களிடையே விதவிதமான கருத்துகள் இருக்கலாம். விதவிதமான நம்பிக்கைகள் இருக்கலாம். விதவிதமான மூடநம்பிக்கைகளும் இருக்கலாம். விதவிதமான கருத்து வேறுபாடுகளும் இருக்கலாம். ஆனால், எந்தக் கருத்து வேறுபாட்டையும் முன்வைக்கிற அல்லது விவாதிக்கிற எந்த முயற்சியும் சமூக நல்லிணக்கத்தைக் கெடுப்பதாகவோ, ஒரு குறிப்பிட்ட சாராரை மட்டுமே குறிவைத்துத் தாக்குவதாகவோ இருக்கக் கூடாது. அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட இப்படிப்பட்ட காரியம் நடந்தால் அதைப் Profiling என்று சொல்லி மனித உரிமை அமைப்புகள் போராடுகின்றன. ஆனால், இந்தியாவிலும் இணையத்திலும்தான் இப்படி ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையுடையோரின் மதத்தில் நடக்கிற குறைபாடுகளை மட்டும் பூதக் கண்ணாடி வைத்துப் பார்த்துத் தாக்குகிற காரியத்தையே முழுநேர அரசியலாகவும், தொழிலாகவும் செய்பவர்கள் இருக்கிறார்கள். கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் திண்ணை போன்ற இதழ்களும் இவற்றுக்கு இடம் கொடுத்து வருகின்றன. கருத்துச் சுதந்திரத்தை ஒருவர் இப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்று முடிவு செய்துவிட்டால், பத்திரிகைகளும் இணையக் குழுக்களும் வேறு என்னதான் செய்யும் பாவம்! இலக்கியத்தின், பத்திரிகை நடத்துவதின், இணையக்குழு நடத்துவதின், வாழ்க்கையின் நோக்கம் harmonization ஆக இருக்க வேண்டும். ஆனால், விமர்சனம் என்ற பெயரிலும் நகைச்சுவை என்ற பெயரிலும் இடதுசாரிகளையும் பிற மதத்தினரையும் முகமூடிகளுக்குள் புகுந்து கொண்டு தாக்குகிற வீரர்களை அனுமதிப்பது எந்தவகையான பத்திரிகை தர்மமும் இல்லை. உதாரணமாக, திண்ணையில் சில மாதங்களூக்கு முன் இஸ்லாமியப் பெயரில் ஒருவர் இஸ்லாமை ஆதரித்து, அபத்தமான கருத்துகளை வைத்திருந்தார். இஸ்லாமின் பெயரைக் கெடுக்க விரும்புகிற இந்துத்துவவாதி ஒருவரே இஸ்லாமியரின் பெயரில் அக்கடித்தத்தை ஏன் எழுதியிருக்க முடியாது? இத்தகைய சந்தேகங்களைக் களைய இணைய பத்திரிகைகளூம், இணையக் குழுக்களூம் முயற்சி எடுக்க வேண்டும். அதற்கு ஒரே வழி, சென்சிடிவான தலைப்புகள் சார்ந்த விவாதத்தில் எழுத விரும்புவோர், தங்களைப் பற்றிய முழுவிவரங்களைப் பொதுவில் சொல்ல விருப்பமில்லை என்றாலும், அவர்கள் எழுதுகிற பத்திரிகை ஆசிரியருக்கோ இணையக் குழுக்களின் மட்டுறுத்துனர்களுக்கோ மட்டுமாவது சொல்ல வேண்டும் என்ற முறையைப் பின்பற்றலாம்.
8. பெரியார் போன்றவர்கள் எப்படி இந்து மதத்தில் இருந்த நல்லவற்றைக் கூட ஏறெடுத்துப் பார்க்க விரும்பாமல் அதைத் தூக்கி எறிய விரும்பினார்களோ, இந்து மதத்தின் மீது வெறுப்பைப் பரப்பினார்களோ, அப்படி நேசகுமார் போன்றவர்கள் இஸ்லாத்தில் இருக்கிற நல்லவற்றைப் பார்க்காமல் (நல்லவை என்று ஒருசில கூட இல்லாமல் ஒரு மதம் இவ்வளவு நாள் தாக்குப் பிடிக்க முடியாது. இவ்வளவு மக்களால் மனமுவந்து பின்பற்றுவதாக இருக்க முடியாது என்று நான் நம்புகிறேன்.) இஸ்லாத்தின் குறைகளை விமர்சிக்கிறேன் என்ற போர்வையில் இஸ்லாத்தின் மீது வெறுப்பைப் பரப்புகிறார்கள். பெரியாரின் இயக்கம் அறிவியக்கம் இல்லை. . .
9. நேசகுமார் ஆரம்பிக்கும்போது மிகவும் பொறுமையாக இஸ்லாத்தின் மீது கரிசனம் காட்டுபவராக ஆரம்பித்தார். இன்றும் சொல்கிறேன். எல்லா மதங்களும் விவாதிக்கவும் விமர்சிக்கவும் படத்தக்கவையே. அதனாலேயே, புனைபெயரில் ஒளிந்து கொண்டு நேசகுமார் எழுதினாலும், அவர் கருத்துகள்தான் முக்கியமென்று மரத்தடியில் அவர் எழுத வேண்டுமென்று நான் விரும்பினேன். ஆனால், போகப் போக பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்பதுபோல, லலைப்பதிவில் அவர் கூட்டணி வைத்திருக்கிற சில பெயர்களைப் பார்க்கும்போது அவர் நோக்கத்தையும், அவர் செய்ய விரும்புகிற அரசியலையும் சந்தேகிக்கவே வேண்டியிருக்கிறது. இஸ்லாத்தில் இருக்கிற - முக்கியமாக மதச்சார்புடைய இஸ்லாம் நாடுகளில் இருக்கிற பிற்போக்கு மற்றும் கண்டிக்கத்தக்க நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிற நண்பர்கள், மதச்சார்பற்ற நாடான இந்தியாவில் அரசியலும் ஆட்சியும் புரிந்த/புரிகிற இந்துத்துவா சக்திகளின் பிற்போக்கு மற்றும் கண்டிக்கத்தக்க மதம் சார்பான நடவடிக்கைகளைப் பற்றி எப்போது எழுதப் போகிறார்கள். ஜெயேந்திரர் என்ற இந்துத்துவத் துறவி கைதானதற்கு வாயைத் திறக்காத அல்லது அவர் பழிவாங்கப்படுகிறார் என்று புலம்புகிற அல்லது அவருக்கு சந்தேகத்தின் பலனை அளிக்க விரும்புகிற நண்பர்கள், ஜெயேந்திரருக்குப் பதில் அத்தகைய கொலை குற்றச்சாட்டொன்றில் முஸ்லீம் மதத் தலைவரோ, கிறித்துவ மதத் தலைவரோ சம்பந்தப்பட்டிருந்தால், எத்தனைக் கட்டுரைகள் எழுதிக் கொண்டாடியிருப்பார்கள் என்பது தெரிந்ததுதானே. ( இன்னொரு பக்கம், ஜெயேந்திரர் இந்து மதத்தின் பிரதிநிதி என்றும் பிராமணர்களின் பிரதிநிதி என்றும் நினைத்துக் கொண்டு, ஜெயேந்திரரைத் தாக்குவது இந்து மதத்தைத் தாக்குவது என்று நினைத்துப் பெரியாரின் சீடர்கள் புளகாங்கிதமடைந்து கொண்டிருக்கிறார்கள். முதலில், ஜெயேந்திரரை இந்து மதத்தின் பிரதிநிதி என்றெல்லாம் பெரியாரின் சீடர்கள் போல் அழைத்து அவருக்கு முக்கியத்துவம் தர நான் விரும்பவில்லை. ஜெயேந்திரன் இந்து மதத்தின் பிரதிநிதி என்று வைத்துக் கொண்டாலும், ஒரு இந்து செய்கிற தவறு எப்படி இந்து மதத்தின் தவறாக முடியும். கம்யூனிஸ்டு தவறு செய்தால் அது கம்யூனிசத்தின் தவறு இல்லை என்பதைப் போலத்தானே இதையும் பார்க்க வேண்டும்! கருணாநிதியும் அண்ணாதுரையும் செய்த தவறுகளுக்கெல்லாம் பெரியார் பொறுப்பாகிவிட முடியுமா என்ன? இது வேறு விஷயம். அதனால் இதற்குள் இங்கு அதிகம் நுழைய விரும்பவில்லை. இந்த அடிப்படையில் பார்த்தோமானால், இஸ்லாமின் பெயரைச் சொல்லி நடைபெறுகிற பயங்கரவாத காரணங்களுக்குக்கூட இஸ்லாமைக் காரணம் சொல்ல முடியாது என்றும் புரிந்து கொள்ளலாம்.)
10. . . . இந்தியாவில் முஸ்லீம்கள் main stream-ல் கலப்பதில்லை. தனித்தனி குழுவாகவே இருக்கிறார்கள் என்று முஸ்லீம்கள் மீது கரிசனம் பொங்க சூர்யா திண்ணையில் ஒருமுறை எழுதியிருந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இன்றுவரை நடைபெற்று வருகிற முஸ்லீம்களூக்கு எதிரான கலவரங்களையும், கோஷங்களையும் பார்க்கும்போது அவர்கள் குழுவாக இருப்பதில் என்ன தவறு? அவர்கள் main stream-ல் கலப்பதில்லை என்றால் அது அவர்களின் தவறு மட்டுமே தானா? சொல்லப் போனால், இப்படிக் குழுவாக இருப்பது முஸ்லீம்களின் குணாதிசயம் அல்ல. அது எல்லா மைனாரிட்டி மக்களின் குணாதிசயம்தான். அமெரிக்கா பொன்ற வெளிநாடுகளில் இதை நான் இந்தியர்களிடமே பார்க்கிறென். நியூ யார்க், நியூ ஜெர்ஸி உள்ளிட்ட வடகிழக்கு மாகாணங்கள், கலிபோர்னியா, டெக்ஸாஸ் என்று இந்தியர்கள் அதிகமாக இருக்கிற மாநிலங்களில் இந்தியர்கள் - இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் கூட - இந்தியர்கள் அதிகம் வசிக்கிற இடங்களிலேயே வசிக்க விரும்புகிறார்கள். கறுப்பின மக்கள் அவர் இனத்தவர் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும், சீனர்கள் சீனா டவுன் எனப்படும் பகுதிகளிலும் வசிப்பதைச் சொல்ல முடியும். Main Stream-ல் கலப்பதில்லை என்ற குற்றச்சாட்டை இவர்கள் மீதும் வீச முடியும். தாங்கள் மைனாரிட்டியாக இருக்கிற ஒரு சூழலில், பாதுகாப்பாகவும், சுமூகமாகவும் உணர எல்லா மைனாரிட்டிகளும் செய்வதுதான் இது. இதையெல்லாம் வைத்து முஸ்லீம்கள் மீது குற்றம் சாட்டுவது சரியில்லை. அமெரிக்காவில் இருந்து எழுதுகிற எத்தனை இந்துத்துவா நண்பர்கள், main stream-ல் கலக்கிற சமூக நோக்கத்துடன், இந்தியர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் வசிக்காமல், வெள்ளையர்கள், கறுப்பர்கள், சீனர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் வசிக்கிறார்கள்? அமெரிக்க இந்துக்களுக்கு ஒரு நியாயம், இந்திய முஸ்லீம்களுக்கு ஒரு நியாயமா? அரசாங்கத்தின் மறைமுக ஆதரவில் மதக் கலவரங்கள் நிகழாத அமெரிக்காவிலேயே, மைனாரிட்டிகள் தனியாகவும், குழுவாகவும், தம்மினத்தவர் வாழும் பகுதிகளிலும் வசிக்க விரும்புகிறபோது, குஜராத் போன்ற மாநிலங்களில் அரசாங்கத்தின் மறைமுக ஆதரவுடன் மதக் கலவரங்கள் நடந்த வரலாறு இருக்கிற இந்தியாவில், அப்படி இருப்பதில் என்ன தவறு?
11. . . . இந்துத்துவ சக்திகள் . . . அவர்களுக்கு இஸ்லாம் என்கிற மதத்தின் மீது எத்தகைய வெறுப்பு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். தகவல் யுகத்தில், எந்தத் தகவலையும் செய்தியையும் தனக்கேற்ற விதத்தில் திரிக்கிற, பயன்படுத்திக் கொள்கிற உத்தி அது. . . . //
|
| |
|
நல்லடியார்
9/13/2005 , 5:50:24 AM
[Comment
url]
|
//தமிழ் மொழி என்றுமே அறிவின் வழி நிற்பது. அது மதம் சார்ந்ததன்று. எல்லா மதங்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் தோன்றிய படைப்புகளையும் தன்னகத்தே கொண்டு அழகியலின் வழி செல்வது. ஆயின் உஙகள் உரையாடல்களின் தொடர்ச்சி நகைப்புக்குரியதாய் அமைந்துள்ளது. மீண்டும் மீண்டும் பழமை வாதத்தில் மூழ்குவதும் பகைமை பாராட்டுவதும் சிறப்பன்று.//
சகோ.குப்புசாமி,
ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்பது தமிழனின் தாரக மந்திரம். இதையேதான் முகம்மது நபியும் சொன்னார். தொடர் முழுவதையும் படியுங்கள். இது வஹீ பற்றியும், இஸ்லாத்தின் அறிமுகம் பற்றியும் சொல்லப்பட்ட தவறான புரிந்துகொள்ளல்களுக்கு விளக்கம் கொடுக்கவே எழுதப்பட்டது என்பது புரியும். |
| |
|
சிங்கை இஸ்மாயில்
9/13/2005 , 6:38:14 AM
[Comment
url]
|
தங்களின் மற்ற பதிவுகளையும் காண மிக ஆவலுடன் இருக்கிறோம். பாராட்டுகள். தனிமனித தாக்குதல்களில் நீங்கள் ஈடுபடாவிட்டாலும், உங்களை தனிப்பட்ட முறையில் தாக்கி அல்லது உணர்ச்சி வசப்பட வைக்க பலர் முனையலாம். அவர்களை வெற்றிப்பெற வைக்காமல் தொடர்ந்து எழுதுங்கள். உண்மையை அறியத்தருவது நமது கடமையும் கூட. சிங்கை இஸ்மாயில் |
| |
|
ஆரோக்கியம் கெட்டவன்
9/13/2005 , 8:40:02 AM
[Comment
url]
|
அடா அடா.. என்னமா வேசம் கட்டுறார்பா நம்ம வேச குமாரு... நந்தலாலா பதிவில ஒரு அனானி ஒரு கேள்வி கேட்டிருந்தாரே... நாபகம் இருக்குதா.. நல்ல வேள இபுனு பசீர் மாதிரி ஆட்கள் மறக்காம சில வெசயத்த சொல்லி இருக்காங்க.. சரி.. குதர்க்கம் பண்ண மட்டும் நேரம் கெடைக்குது.. ஆறேழு மாசமா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மட்டும் நேரம் கெடைக்கலியா?
இப்பவும் 'உள் வாங்கி'க்கினே கீறாரா? |
| |
|
நேச குமார்
9/13/2005 , 9:51:47 AM
[Comment
url]
|
நல்லடியார்,
// நீங்கள் எதிர்ப்பது அனைத்துவகை தீவிரவாதங்களும் என்றால் உங்களோடு இணைந்து எதிர்ப்பதில் ஆட்சேபனை இல்லை. மாறாக இஸ்லாம்தான் எல்லா தீவிரவாதத்திற்கும் காரணம் போல் உங்கள் கட்டுரையின் சாராம்சமாக இருக்கும் போதும், இதர தீவிரவாதங்களை நீங்கள் எதிர்க்காத போதும் உங்கள் நடு நிலைமை சந்தேகத்திற்குறியதாகிறது. //
இவ்விஷயம் குறித்து விசிதா அவர்களுக்கு முன்பே பதில் சொல்ல வேண்டும் என நினைத்திருந்தேன். இப்போது நீங்கள் கேட்டது நல்லதாகப் போயிற்று.
சகோதரரே, ஒரு மதத் தீவிரவாதத்தை எதிர்ப்பவர்கள் அவசியம் மற்ற மதத் தீவிரவாதங்களை எதிர்க்க வேண்டுமா? அதே போன்று, ஒரு மதத்தின் அடிப்படைவாதத்தை, அது தூண்டும் வன்முறையைக் குறித்து பேசுபவர்கள், எழுதுபவர்கள் அவசியம் தமது மதத்தின் முறைகேடுகளை, பழமைவாதத்தை, மூடநம்பிக்கைகளை விமர்சித்துவிட்டுத்தான் இதைச் செய்ய வேண்டுமா?
அப்படி நீங்கள் கருதுவீர்களேயானால், எந்த விஷயத்திலும் யாரும் வாயைத் திறக்க முடியாது என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகின்றேன். உதாரணமாக இடதுசாரி கோட்பாடுகளை விமர்சிப்பவர்கள் முதலாளித்துவத்தை விமர்சித்துவிட்டுத்தான் அங்கே செல்ல வேண்டியிருக்கும், பிராமனீயத்தை விமர்சிப்பவர்கள் மற்ற சமுதாயங்களின் ஜாதிவெறியை விமர்சித்துவிட்டுத்தான் வாயைத் திறக்க வேண்டியிருக்கும், குஜராத்தில் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு நிகழ்ந்த வன்முறையைப் பற்றி பேசுபவர்கள் இஸ்லாம் என்ற பெயரில் கடந்த 1425 வருடங்களாக நிகழ்த்தப்பட்டுவரும் வன்முறைகளை விமர்சித்துவிட்டுத் தான் பேச வேண்டியிருக்கும், குஜராத்தைப் பற்றி பேசுவதற்கு முன்னர் காஷ்மீரில் அழித்தொழித்து விரட்டப் பட்ட ஹிந்துக்கள், பாகிஸ்தானில் அடிமைகளாக இருக்கும் ஹாரிக்கள், கற்பழிக்கப் படும் மாசிஹ்க்கள்(கிறித்துவர்கள்), வங்கதேசத்தில் தினம் தினம் வன்முறைகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் இந்து, பவுத்த, மலைவாழ் மக்கள் ஆகியோரைப் பற்றியெல்லாம் பேசி தங்களின் 'நடுநிலைமையை' நிரூபித்துவிட்டுத் தான் பேசவேண்டியிருக்கும் - இதெல்லாம் சரி என்று நீங்கள் கருதுகின்றீர்களா?, நான் அது தேவையில்லை என்று நினைக்கின்றேன்.
இன்னும் ஒன்று, ஒருவர் இந்துத்துவத்தை நம்புபவர், கடைப்பிடிப்பவர் என்பதாலேயே அவருக்கு எந்த கருத்தும் இருக்கக் கூடாது, பாதிக்கப் பட்டதை வெளியில் சொல்லக் கூடாது, அவர் சொல்வது தவறாக இருக்கும் என்று நீங்கள் அல்லது மற்றவர்கள் கருதினால், அதை சற்றே திருப்பிப் பிடித்து உங்களை அதே நிலையில் வைத்துப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் - இந்துத்துவத்தை விட கொடிய கொள்கைகளை, கோட்பாடுகளைக் கொண்டுள்ளது இஸ்லாம். ஆம், நான் இங்கே அரசியல் இஸ்லாத்தை மட்டுமோ, வகாபியிஸத்தை மட்டுமோ குறிப்பிடவில்லை - ஒட்டு மொத்த இஸ்லாத்தை நோக்கி இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றேன். ஒருவரது மதநம்பிக்கைகள் காரணமாக அவரை, அவரது சமூகத்தை இழிவுபடுத்த வேண்டும், ஒழித்துக் கட்டவேண்டும் என்றெல்லாம் குறிப்பிடும் ஒரு புனிதநூலை, அதன்படி நடந்து காட்டிய ஒரு நபியை, அதை இன்றளவுக்கும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கருதும் கோட்பாட்டை பின்பற்றும் நீங்கள், எந்த முகத்துடன் குஜராத்தில் வன்முறையில் ஈடுபட்ட இந்து அடிப்படைவாதிகளை எதிர்கொள்வீர்கள்? - ஆனால், இதிலும் நான் நம்பிக்கை வைக்கவில்லை.
ஒருவரது கோட்பாடுகள் எவ்வாறிருந்தாலும், அவர் ஒரு முஸ்லிம் தீவிரவாதியாகவே இருந்தாலும், தாம் பாதிக்கப் படும்போது அதை வெளியில் சொல்ல உரிமை இருக்கிறது என்று கருதுகிறேன். இதுதான் அனைத்து நாகரிக நாடுகள்/சமுதாயங்களின் கருத்துமாக இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே கொடூரமான குற்றவாளிகளுக்குக் கூட தமது கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை நமது இந்திய குற்றவியல் சட்டம் வழங்கியிருக்கிறது - பாதிக்கப் பட்டவர்களை அல்லது குற்றம் புரிந்தவர்களை அவர்களது நம்பிக்கைகளை/கோட்பாடுகளைப் பார்த்து நீதி வழங்கும் ஷரியத்து - அரபி மனுதர்ம சாஸ்திரம் நல்லவேளையாக இன்னும் எங்கும் பரவவில்லை.
மேலே கண்ட காரணங்களினாலேயே, இந்த வாத-அடிப்படையையே எதிர்ப்பதனாலேயே நான் இந்து மத அடிப்படைவாதத்தைப் பற்றி பேசுவதில்லை, இந்து மதத்தைப் பற்றிய விமர்சனங்களையும செய்வதில்லை.
மேலும் ஒரு விஷயம், நீங்கள் திரும்பத் திரும்ப ஒரு விஷயத்தை குறிப்பிட்டு வருகின்றீர்கள் - அதாவது, பின் லாடனையும், கோவை பாட்சாவையும் மற்ற இஸ்லாமிய தீவிரவாதிகளையும் எதிர்ப்பதில் என்னுடன் ஒத்துழைப்பதாக. அய்யா, பாட்சாவுடன் எனது நன்பர் விரிவாக விவாதித்துள்ளார்(இது குறித்து நேரம் கிடைக்கும்போது விரிவாக) - கோவை சிறையில் அடைபட்டிருந்தபோது. பாட்சா திரும்பத் திரும்ப சொன்ன ஒரு விஷயம், தான் நபிகளாரின் சுன்னாவின் படியே செய்வதாக. தீவிரவாதிகளை எதிர்க்கத் தயாரென்றால், தீவிரவாதிகளின் நாயகமான முகமது அவர்களையும் எதிர்ப்பீர்களா? அவரது நடவடிக்கைகளை விமர்சிப்பீர்களா? குஜராத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம்களைக் குறித்து பேசும்போது ஒரு கணநேரமேனும் அரேபியாவில் நபிகளாரின் நேரடி உத்தரவின் படி கற்பழிக்கப் பட்ட கொலை செய்யப் பட்ட யூதர்களையும், கிறிஸ்துவர்களையும், பாகன்களையும் குறித்து நினைத்துப் பார்ப்பீர்களா? ஏனென்றால், கொலை, கொள்ளை, கற்பழிப்பு என அனைத்து வன்முறைகளையும் செய்துவிட்டுப் போயிருக்கின்றார் நபிகள் நாயகம். இது குறித்து ஆரோக்கியம் அவர்கள் தமது பதிவில் விவரமாக எழுதி வருகின்றார்:
http://ennamopo.blogspot.com
சற்றே அவரது பதிவில் சென்று அவர் குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள் தவறென்றால் தெளிவு படுத்துங்கள்.
இத்தைகைய உலக சரித்திரத்தின் மகத்தான தீவிரவாதியை எடுத்துக் காட்டாகக் கொண்டு, அவரது அனைத்து செயல்பாடுகளையும்( தாடி வைப்பது, சென்ட் அடித்துக் கொள்வது, பல பெண்களை மணந்து கொள்வது, அடிமைப் பெண்கள்(தலித்) கூட வல்லுறவு கொள்வது, சாப்பிடுவது, உடலுறவில் ஈடுபடுவது, தண்ணீர் அருந்துவது பின்பற்றும் நீங்கள் தீவிரவாதிகளை பெருமளவில் உற்பத்தி செய்வதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது. இந்த தாய்ச்சியைத் தொடாமல், எப்படி உங்களது தீவிரவாதத்தை எதிர்கொள்வது?
இணையத்தின் விவாதம் புரியும் இஸ்லாமிய சகோதரர்களைப் பாருங்கள் - அவர்களது எழுத்தைப் பாருங்கள் வன்முறை எந்த அளவிற்கு உங்களது மனங்களில் புரையோடிப் போயிருக்கிறது - எந்த அளவிற்கு மதமாச்சர்ய விஷம் உங்களது நெஞ்சங்களில் பரவியிருக்கிறது என்பது தெரியும்.
இந்துக்களின் அவதார நம்பிக்கைகளை கிண்டலடிப்பதை எல்லா இஸ்லாமியர்களும் (நீங்கள் மற்றும் தமிழோவியத்தில் எழுதும் நாகூர் ரூமி உட்பட) செய்து வருகின்றீர்கள். அதே சமயத்தில் உங்களது நபித்துவ நம்பிக்கைகளைப் பற்றி என் போன்றவர்கள் கேள்வி எழுப்பும் போது, அது துவேஷத்தைப் பரப்புவதாக, சமூகங்களிடையே பிளவை உருவாக்குவதாக உங்களுக்கெல்லாம் தெரிகிறது. உங்களுக்கு சப்பைக் கட்டு கட்டும் இணைய அறிவுஜீவிகளுக்கும் கலர் கலராய்த் தெரிகிறது.
உங்களது கனிவான கவனத்துக்கு ஒன்றைக் கொண்டுவர விரும்புகின்றேன். நான் இஸ்லாத்தைப் பற்றி எழுதத் துவங்கியது நாகூர் ரூமி அவர்களை எதிர்கொண்டுதான். எனது பழைய எழுத்துக்களைப் பார்க்க வேண்டுமென்றால் இந்தப் பதிவுக்குச் சென்று பாருங்கள்:
http://islaam.blogdrive.com
நான் நபித்துவம் குறித்து கேள்வி எழுப்ப முனைந்ததும், நாகூர் ரூமியின் புத்தகத்தில் இந்துக்களின், கிறிஸ்துவர்களின் நம்பிக்கைகளைக் கிண்டலடித்திருந்ததைக் கண்டுதான். நாகூர் ரூமி மட்டுமல்ல, கடந்த ஒரு வருடங்களாக இணைய விவாதங்களில் நான் காண்பது என்னவென்றால், நீங்கள் உட்பட எந்தவொரு முஸ்லிமும் மற்ற மதங்களைச் சாடுவதை, கிண்டலடிப்பதை மிகவும் சகஜமாகச் செய்து வருகின்றீர்கள். நாங்கள் அதையே மிகவும் மென்மையாக, நாகரிகமாக செய்தால் கூட அதை உங்களைப் போன்ற அடிப்படைவாதிகளால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. மற்றவர்களின் நம்பிக்கைகளை மூடநம்பிக்கைகள் என்று கருதும் நீங்கள், உங்களது நம்பிக்கைகள் எந்த அளவிற்கு மூடமும், மூர்க்கமும் நிறைந்திருக்கின்றது என்று சற்றும் சிந்திப்பதில்லை. இதனாலேயும் நான் வஹி பற்றி எழுத முனைந்தேன்.
எப்படியோ, முகமது நபியவர்களின் சுன்னாவைப் பின்பற்றி தமது நம்பிக்கைகளை விமர்சிப்பவர்களையெல்லாம் தீர்த்துக் கட்ட வேண்டும் என எண்ணாமல், முதலில் கை கொண்டு எதிராளியை வன்முறையால் எதிர்கொள்ள வேண்டும் என்ற ஹதீதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், விவாத நாகரிகத்தோடு நீங்கள் எழுத முயற்சி செய்திருப்பதை நான் பாராட்டுகின்றேன் - எழுதுங்கள், காத்திருக்கின்றேன்.
(நேரமின்மை காரணமாக மற்றவர்களின் காமெண்டுகளுக்கு இப்போது பதில் சொல்லவில்லை - கட்டுரை தொடர்ந்து வரும் என்பதால், விவாதிக்க, விளக்க நிறைய சந்தர்ப்பங்கள் அமையும் என்று நினைக்கின்றேன்)
|
| |
|
நேச குமார்
9/13/2005 , 10:01:33 AM
[Comment
url]
|
பி.கே.சிவகுமாருக்கென்று தனிப்பட்ட முறையில் இந்த பதிலை அளிக்கவில்லையென்றாலும், அவருக்கும் சேர்த்து இதை எழுதியிருந்தேன் மரத்தடியில். பார்க்க:
http://islaamicinfo.blogspot.com/2004_12_01_islaamicinfo_archive.html
யமுனா ராஜேந்திரனுக்கு நான் அளித்த பதிலும் பதிவுகள் இணைய தளத்தில் காணக் கிடைக்கும். முடிந்தால் இந்திய நேரப்படி இன்றைய இரவு அதை தேடி எடுத்து உள்ளிடுகின்றேன்.
திண்ணையில் நாகூர் ரூமி அவர்கள் இஸ்லாத்தை அறிமுகப் படுத்தி எழுதவந்த புத்தகத்தில் மற்ற மத நம்பிக்கைகளை சகட்டுமேனிக்கு கிண்டலடித்திருப்பதை எழுதியிருந்தேன். இங்கே தேடினால், கிடைக்கும்:
http://www.thinnai.com/author1009.html
ஏன் இஸ்லாமிய வன்முறை குறித்து எழுதுகின்றேன் என்பதை பத்ரி அவர்களுக்கு விளக்கி நான் திண்ணையில் முன்பு எழுதியிருந்தேன், அக்கடிதத்தையும் நேரமிருந்தால் பார்க்கவும்:
http://www.thinnai.com/le1125044.html
- நேச குமார் - |
| |
|
ibunu basheer
9/13/2005 , 11:21:13 AM
[Comment
url]
|
//சகோதரரே, ஒரு மதத் தீவிரவாதத்தை எதிர்ப்பவர்கள் அவசியம் மற்ற மதத் தீவிரவாதங்களை எதிர்க்க வேண்டுமா?//
சகோதரர் நேசகுமார் அவர்களே! நீங்கள் எதிர்ப்பது தீவிரவாதம்தான் என்றால் அதிலென்ன மத வேறுபாடு? எந்த மதத்தின் பெயரால் நடத்தப்பட்டாலும் தீவிரவாதம், தீவிரவாதம் தானே அய்யா! மற்ற மதங்களின் பெயரால் நடத்தப்படும் தீவிரவாதங்களை கண்டிப்பதில் உங்களுக்கு ஏன் இந்த தயக்கம்?
அப்படி இல்லாமல், நீங்கள் எதிர்ப்பது இஸ்லாம் மட்டுமே என்றால், அதை நேரடியாக சொல்லலாமே? தீவிரவாதத்தை எதிர்க்கிறேன் என்ற போர்வை எதற்கு?
//அதே போன்று, ஒரு மதத்தின் அடிப்படைவாதத்தை, அது தூண்டும் வன்முறையைக் குறித்து பேசுபவர்கள், எழுதுபவர்கள் அவசியம் தமது மதத்தின் முறைகேடுகளை, பழமைவாதத்தை, மூடநம்பிக்கைகளை விமர்சித்துவிட்டுத்தான் இதைச் செய்ய வேண்டுமா?//
அது உங்கள் நிலைப்பாட்டை பொறுத்தது. நீங்களே வலிய சென்று இன்னொரு மதத்தை குறை சொல்ல முற்பட்டீர்களென்றால், அதற்கு முன் நீங்கள் சார்ந்திருக்கும் மதத்தின் மூடநம்பிக்கைகளை, குறைகளை களைந்து விட்டுத்தான் மற்றவர்களை திருத்த நீங்கள் வரவேண்டும். மேலே உள்ளது போல கேள்விகளை கேட்டுவிட்டு நழுவ இயலாது.
|
| |
|
inomeno
9/13/2005 , 1:52:55 PM
[Comment
url]
|
இதுவரை உங்கள் வலைப்பதிவில் மட்டுமே எழுதிவந்த நீங்கள்,முதல் முறையாக டமிலொவிஅம்.cஒம் யில் எழுதுவதற்கு வாழ்த்துக்கள். உங்கள் கருத்தைத் தெளிவாக மற்றும் கோர்வையாக வைக்க விண்ணப்பிக்கிறேன்.
/. இஸ்லாத்தின் மீது சேற்றை அள்ளிப் பூசிக் கொண்டிருப்போர் நியாயமான விமர்சனங்களை மேற்கொள்வதில்லை. தங்களின் மூடத்தனமும் குற்றங்களும் இஸ்லாத்திற்கு எதிராக இருப்பதால் நியாய உணர்வுகளை அவர்களால் மதிக்க முடிவதில்லை.. / பொத்தம் பொதுவாக மேலே சொன்னதுப்போல் குற்றம் சாட்டாதீர்கள் .அது உங்கள் கருத்துக்கு எந்தவிதத்திலும் வலுச் சேர்க்கப் போவதுயில | | |