|
உன்னிடம் இரகசியங்கள் இல்லையென்றே கருதியிருந்தேன் அக்கணம் வரை.
நீ சொல்லியவை எல்லாமே இரகசியங்கள் என்றும் பிரசுரிக்கத் தகுதியற்றவை என்றும் அக்கணம் தான் எனக்கு அறிவித்தது.
இரகசியங்கள் இரசிப்பதற்கானவை அல்ல அவை குருதி தோய்ந்த வலிகள் என்பதையும் அக்கணமே தெரிவித்தது எனக்கு.
இனிமேல் என்னிடம் சொல்ல உனக்கு இரகசியங்கள் இருக்கப் போவதில்லை.
நானே உனக்கு ஓர் இரகசியமாகி விட்ட பிறகு.
|