உள்ளத்தினுள்ளே உண்மையைத் தேடி என்னை நானே கேட்கும் கேள்விகள் கோடி
அடுத்த மனிதன் நிலையிலிருந்து ஜந்து நிமிடம் சிந்தித்தாயா ? கேட்ட கேள்வி என்னை நானே
பறந்து உலகில் உண்மை நிலையை மறந்து ஓட்டப் போட்டியில் ஓடிக் களைத்தாயே வெற்றி என்ன கூறுவாயா ? கேட்ட கேள்வி என்னை நானே
வெட்டிப் பேச்சு பேசும் வீணர் கூட்டத்தில் தலைமைப் பதவிக்கு ஏன் தவிக்கின்றாயோ? கேட்ட கேள்வி என்னை நானே
அன்பைக் கொடுத்து துன்பம் வாங்கியும் ஏன் இன்னமும் வாழ்க்கைச் சந்தையில் உனக்கு வியாபாரம் ? கேட்ட கேள்வி என்னை நானே
துயர் துடைக்க விரலில்லா கைகளின் சொந்தக்காரன் என்பதன் பெருமையென்ன ? கேட்ட கேள்வி என்னை நானே
விடையற்றுப் போன வினாக்கள் விலையாகாமல் மனதை நிறைக்கும் போது பல சமயங்களில் கேட்கும் கேள்வி என்னை நானே
சத்தி சக்திதாசன்
|