ஆண் (நட்பு) பெண் !!

அது போல் ஆரோக்கியமான நட்பு இன்று பரவலாக இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. ஆனால் இதன் ஆயுட்காலம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஒரு குறிப்பிட்டக் காலம் வரை அதாவது திருமணம் வரை தான் தொடர முடிகிறது. அதற்கு மேல் தொடர தடையாக இருப்பது, கணவன், மனைவி மனோபாவமா, குடும்பமா, இல்லை சமுதாயமா புரியவில்லை. நாம் தயக்கமோ எதிர்பார்போ இல்லாமல் எந்த விஷயங்களையும் நண்பர்களிடம் பகிர்ந்துக் கொள்ள முடியும்; மன அழுத்தம் குறைவதோடு ஆறுதலையும் தெளிவையும் பெற முடியும். என் அனுபவத்தில் இம்மாதிரி நட்பினால் கணவன் மனையிடையே ஏற்படவிருந்த இழப்பு தவிர்க்கப் பட்டு பலமான உறவு அமைய வழி செய்தது. பெரியவர்களும், கணவன் நட்பை மனைவியும், மனைவி நட்பைக் கணவனும் சரியாகப் புரிந்துக் கொண்டு ஆரோகியமான நட்பை ஊக்கப் படுத்த வேண்டும்.
தம்பதிக்குள் சிறு சிறு பிரச்சனையோ, புரிதல் இன்மையோ ஏற்பட்டால் இத் தகைய நண்பன், நண்பி மூலம் தெளிவு படுத்தி சரி செய்வது சுலபம். நண்பர்கள் மூலம் சரியானக் கோணத்திலிருந்து தீர்வுகள் அலசப் பட்டு சரி செய்யும் வாய்ப்புகளும் அதிகம். நண்பர்கள் சில விஷயங்கள் சொல்லும் போது தயக்கம் இல்லாமல் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளவும் முடியும். வீட்டுப் பெரியவர்கள் உறவினர்களால் சாதிக்க முடியாததைக் கூட இத்தகைய நட்பு சாதிக்கும் என்பதி ஐயம் இல்லை. எனவே சரியான புரிதலுடன் இத்தகைய நட்பு கடைசி வரை தொடர வேண்டும் என்பதே அவா.