"வாப்பா, செல்வம்... வா, பழனி! எப்படி இருக்கே செல்வம்! கை புண்ணெல்லாம் ஆறிப் போச்சா? ·பாக்டரியிலேயே கணக்கெழுதற வேலை போ
ட்டுத்தரச் சொல்லி இருக்கேன்.. என்ன சொல்றே?"
ஒரு பக்கம் பரமசிவமும், இன்னொரு பக்கம் நாகலிங்கமும் உட்கார்ந்து கொண்டிருந்தனர். பரமசிவத்தின் காலடியில் கோபாலு வழக்கமான சேவை
செய்து கொண்டிருந்தான். துண்டை இடுப்பில் கட்டி கூனி வளைந்து நின்றிருந்தான் பழனி.
"ஐயா கேலி பண்றீங்களா? அவனாலே எப்படி எழுத முடியும்?"
"மரக்கை ஒண்ணு செஞ்சு பொருத்தி பயிற்சி கொடுத்தா எழுத முடியும்பா... அதுக்கான ஆளுங்களுக்கு லெட்டர் போட்டிருக்கேன். அதாரு... ஒன்
மருமக இல்லே?"
"ஆமாங்க, மச்சினன் பொண்ணு. செல்வத்தைக் கட்டிக்கப் போறவ..."
'பார்த்தியா ஐயா மனசை' என்பது போல் பழனி பார்க்க, 'எல்லாம் போலி' என்று கண்களால் பதில் தந்தாள் பொன்னி.
"ரொம்ப சந்தோசமுங்க... இந்த ஊரே பொன்னிக்குப் பிடிக்கலையாம். வெளியூர் போயிடலாங்கறா", என்றான் செல்வம்.
"ஏன், ஏன், ஏம்மா பிடிக்கலை? பிடாரித்தாயி பொன்னாக் கொடுக்கிறா... முப்போகம் விளைகிற பூமி!"
"அதெல்லாம் உண்டானப் பட்டவங்களுக்கு. ஏழை பாழைங்களுக்கு எல்லாம் ஒரே இடம்தான்."
பொன்னியின் பேச்சு பரமசிவத்தை உள்ளூரத் தாக்கியது.
"சரிம்மா... கடனைக் கட்டினாப் போகலாம்".
"கடனா, நீங்க அடிபட்டதுக்கு நஷ்டஈடு கொடுக்கணுமே!"
'அட சட்டமும் தெரிஞ்சிருக்கே!' மனசின் இரண்டாவது அதிர்ச்சி.
"ஆமாம், நஷ்டஈட்டுப் பணம் இருபதாயிரம் போக ஒரு லட்சம் பாக்கி நிற்குதே!"
இப்போது பழனிச்சாமி மனசுக்குள் பொன்னியைப் பாராட்டினார். 'அட, ஒரு லட்சத்தை ஏமாந்திருப்போமே. பொன்னி விஷயம் தெரிஞ்சவதான்'!
"எப்படீங்க? கணக்குப் பார்க்கலாமா?"
"தாராளமா. இப்படி என்னிக்காவது, யாராவது கேட்க வருவாங்கன்னு தெரியும். எல்லார் கணக்கும் துல்லிதமா இருக்கு... இரு, வரேன்..." அவரே
போய் பருமனான கணக்குப் புத்தகத்தோடு வந்தார்.
"ஏம்மா, நீ படிச்சிருக்கியா?"
"இந்தக் கணக்குப் பார்க்கிற அளவு படிச்சிருக்கேங்க".
இந்த சமயம் நாகலிங்கம் எழுந்து வந்தான்.
"நம்மகிட்டே வேலை செய்கிற நாய். நம்ம தின்ன மிச்சத்தைத் திங்கிற பன்னி! அவங்ககிட்ட என்னப்பா பேச்சு. ஒரு லட்சம் என்ன... இரண்டு லட்
சம் பாக்கி! என்னடி செய்யப் போறே? ஏ, பேமானி! நொண்டிப்பயலுக்கு பக்காலத்து வேற..." நோட்டைப் பிடுங்கிக் கொண்டான்.
(தொடரும்)
|